கிண்ணியாவில் எட்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைப்பு

Published By: Vishnu

20 Jun, 2021 | 09:39 AM
image

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் எட்டு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நன்னி, கண்டல்சாடு, மணல் ஆறு, சோள வெட்டுவான், தளவாய், படுகாடு, சாவாறு, கங்கை ஆற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள கசிப்பு உற்பத்தி நிலையங்களே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த கசிப்பு உற்பத்தி நிலையங்களில் 2000 ரூபா நாள் கூலிக்கு பணியாளர்களை வேலைக்கமர்த்தி கசிப்பு உற்பத்தி முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அக் கசிப்பு உற்பத்தி நிலையங்களில் கசிப்பு மற்றும் கோடாத் திரவமும் அடங்கிய 26 பரல்களில் சுமார் 3000  லீட்டர் கசிப்புக்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த  8 கசிப்பு உற்பத்தி நிலையங்களும் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கசிப்பு உற்பத்தி நிலையங்கள் வைத்திருந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் அவர்களை தேடும் பணிகளை முன்னெடுத்து வருவதாகவும்  கிண்ணியா பொலிஸர் குறிப்பிட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50