மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சைகளை வழங்கும் பமுனுகம, உஸ்வட்டகெட்டியாவ பகுதியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்தில் துறவியொருவர் பொல்லால் தாக்கப்பட்டு நேற்று உயிரிழந்துள்ளார்.
குறித்த இல்லத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தாக்கியமையினாலேயே இந்த உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சம்பவம் குறித்து வெலிசறை நீதிவான் நீதிபதி விசாரணையை நடத்தியுள்ளதுடன், உயிரிழந்த துறவியின் பிரேத பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளது.
அங்கு 18 மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர். அத்தகைய ஒரு முதியோர் இல்ல பராமரிப்பதில் பொருத்தமான அளவுகோல்கள் பின்பற்றப்பட்டுள்ளனவா என்பதையும், அதற்கான பதிவு பெறப்பட்டுள்ளதா என்பதையும் கண்டறிய விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந் நிலையில் இக் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், பமுனுகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM