செ.தேன்மொழி
தெற்கு பகுதியில் மூன்று வாரகாலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட சோதனை நடவடிக்கையின் போது 52 கிலோ ஹெரோயின் போதைப் பொருளுடன் , களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
பொலிஸ் தலைமையகத்தின் , திட்டமிட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மூன்று வாரகாலம், விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
காலி , ஹிக்கடுவை, ஹாங்கம மற்றும் பத்தேகம ஆகிய பகுதிகளிலேயே இந்த சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் , இதன்போது ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களுள் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
இவர்களிடமிருந்து 52 கிலோ கிராம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , சந்தேக நபர்கள் போதைப் பொருள் கடத்தலுக்காக பயன்படுத்திய இரு வாகனங்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்நிலையில் , சந்தேக நபர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினர் , அவர்களை விஷ போதைப் பொருட்கள் மற்றும் அபாயகர ஒளடத கட்டளைச் சட்டவிதிகளுக்கு கீழ் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி , ஏழு நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தவும் எதிர்பார்த்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM