சிங்கம் மற்றும் குரங்குகளுக்கு ஏற்படும் கொரோனா தொடர்பில் ஆராய வேண்டியது அவசியம்..!

Published By: J.G.Stephan

19 Jun, 2021 | 12:40 PM
image

(எம்.மனோசித்ரா)
சீனாவில் பூனை மற்றும் குரங்கினத்தைச் சேர்ந்த விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், ஏனைய நாடுகளில் இது உறுதிப்படுத்தப்படவில்லை. எவ்வாறிருப்பினும் ஏனைய நாடுகளில் சிங்கம் மற்றும் குரங்குகளுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், இலங்கையிலும் இது தொடர்பில் ஆராய வேண்டிய முக்கியத்துவமுடையதாகும் என ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின்  நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவப் பிரிவின் பேராசிரியர் விசேட வைத்திய நிபுணர் நீலிகா மலவிகே தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், சில நாடுகளில் சிங்கம் மற்றும் கொரில்லா உள்ளிட்ட விலங்குகளுக்கும் கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. குறித்த விலங்குகளை பாதுகாக்கும் மனிதர்களிடமிருந்தே அவற்றுக்கு தொற்று ஏற்பட்டமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதாக எந்தவொரு நாட்டிலும் உறுதிப்படுத்தப்படவில்லை.

 இலங்கையிலும் இது தொடர்பில் ஆராயப்பட வேண்டிய முக்கியத்துவமுடையதாகும். காரணம் சீனாவின் வுஹான் மாநிலத்தில் ஏதேனுமொரு விலங்கிடமிருந்தே கொரோனா வைரஸ் பரவியது என்று கூறப்படுகிறது. ஆனால் அந்த விலங்கு எது என்பது இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை.

அதற்கமைய இதுவரையில் கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களுக்கமைய பூனை குடும்பத்தைச் சேர்ந்த அல்லது பூனை இனத்தைச் சேர்ந்த (சிங்கம் உள்ளிட்ட விலங்குகள்) விலங்குகளிடமிருந்தும் , கொரில்லா போன்ற குரங்கினத்திடமிருந்தும் கொரோனா வைரஸ் மனிதர்களுக்கு தொற்றியுள்ளதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான நாடுகளில் இந்த தரவு இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10