மட்டக்களப்பு கிரான்குளம் கடற்கரை பகுதியில் உயிரிழந்த நிலையில் 3 கடல் ஆமைகள் உட்பட டொல்பின் மீன் ஓன்றும் இன்று சனிக்கிழமை (19) கரையொதிங்கியுள்ளன.
கடந்த 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தையண்டிய கடல்பகுதியில் எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ பரவல் காரணமாக, கடலில் கப்பல் மூழ்கிவருகிறது. இதனால், பல பிரதேசங்களில் கடற்கரையில் ஆமைகள் டொல்பீன் மீன்கள் உயிரிழந்து கரையொதிங்கி வருகின்றன.
இந்நிலையில் மட்டக்களப்பு கடல்பகுதியிலும், உயிரிழந்த நிலையில் ஆமைகள் டொல்பீன் மீன் கரையொதிங்கியுள்ளன. இது தொடர்பாக மீனவர்கள் உரிய அதிகாரிகளுக்கு அறிவித்தனர்.
இதனையடுத்து, அந்த பகுதிக்கு கடற்றொழில் நீரியல்வள திணைக்கள அதிகாரிகள், கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையின் உத்தியோகத்தர்கள், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் உட்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டதுடன், இறந்த நிலையில் கரையொதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM