எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம்: பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்கு சிறப்புக் குழுக்கள் நியமிப்பு

Published By: J.G.Stephan

19 Jun, 2021 | 10:55 AM
image

(எம்.எப்.எம்.பஸீர்)
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் பலதுறை சார் பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்கு தனித் தனியாக சிறப்புக் குழுக்களை அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் நியமித்துள்ளதாக அறிய முடிகின்றது.

 குறிப்பாக உயிரியல் கூறுகளை ஆராய தனியாகவும், தொழில்நுட்பம் சார் விடயங்களை ஆராய பிரத்தியேக குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

அதன்படி கடந்த சில தினங்களாக நாட்டின் கரையோரப் பகுதிகளில் மீட்கப்பட்ட கடலாமை உள்ளிட்ட உயிரினங்களின்  உடல்கள்  தொடர்பான  பரிசோதனைகள் சிறப்புக் குழுவொன்றூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் கௌரி ரமணா தெரிவித்தார்.

இந்த பரிசோதனைகளூடாக கடல்வாழ் உயிரிழனங்கள் உயிரிழந்தமைக்கான உறுதியான காரணம் குறித்து கண்டறிய முடியும் எனவும் அவ்வறிக்கைகள் மிக விரைவில் வெளிபப்டுத்தப்படும் எனவும்  அரச இரசாயன பகுப்பாய்வாளர் கௌரி ரமணா  சுட்டிக்காட்டினார்.

இதனை தவிர கப்பல் தீப்பற்றிய போது ஏற்பட்ட இரசாயன கசிவினால் கடல் நீருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் கடல் நீரின் தரம், கடலோர நிலைமை குறித்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்காக தனித் தனியான குழுக்கள்  கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அதனைவிட, நீதிமன்றில் இடம்பெறும் குற்றவியல் நடவடிக்கைகளுக்காக பெறப்பட்டுள்ள மாதிரிகள் மீதான பரிசோதனைகள், தொழில் நுட்பம் சார் விடயங்களை மையப்படுத்தியும் பகுப்பாய்வுகள் இடம்பெறுவதாக இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் கூறினார். கப்பலின் டி.வி.ஆர். உபகரணம் தொடர்பிலான பகுப்பாய்வுகளும் அதில் உள்ளடங்கும் என அவர் குறிப்பிட்டார்.

 இவை இவ்வாறிருக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எனும் சி.ஐ.டி. அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ள கப்பலின் உள்நாட்டு பிரதி நிதி நிறுவனத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பின் காப்புப் பிரதியை தற்போது அத்திணைக்களத்தின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன தலைமையில் இந்த பகுப்பாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58