(எம்.எப்.எம்.பஸீர்)
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் முன்னெடுக்கும் பலதுறை சார் பகுப்பாய்வு நடவடிக்கைகளுக்கு தனித் தனியாக சிறப்புக் குழுக்களை அரசாங்க இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களம் நியமித்துள்ளதாக அறிய முடிகின்றது.
குறிப்பாக உயிரியல் கூறுகளை ஆராய தனியாகவும், தொழில்நுட்பம் சார் விடயங்களை ஆராய பிரத்தியேக குழுக்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
அதன்படி கடந்த சில தினங்களாக நாட்டின் கரையோரப் பகுதிகளில் மீட்கப்பட்ட கடலாமை உள்ளிட்ட உயிரினங்களின் உடல்கள் தொடர்பான பரிசோதனைகள் சிறப்புக் குழுவொன்றூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரச இரசாயன பகுப்பாய்வாளர் கௌரி ரமணா தெரிவித்தார்.
இந்த பரிசோதனைகளூடாக கடல்வாழ் உயிரிழனங்கள் உயிரிழந்தமைக்கான உறுதியான காரணம் குறித்து கண்டறிய முடியும் எனவும் அவ்வறிக்கைகள் மிக விரைவில் வெளிபப்டுத்தப்படும் எனவும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் கௌரி ரமணா சுட்டிக்காட்டினார்.
இதனை தவிர கப்பல் தீப்பற்றிய போது ஏற்பட்ட இரசாயன கசிவினால் கடல் நீருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் கடல் நீரின் தரம், கடலோர நிலைமை குறித்தும் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அதற்காக தனித் தனியான குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதனைவிட, நீதிமன்றில் இடம்பெறும் குற்றவியல் நடவடிக்கைகளுக்காக பெறப்பட்டுள்ள மாதிரிகள் மீதான பரிசோதனைகள், தொழில் நுட்பம் சார் விடயங்களை மையப்படுத்தியும் பகுப்பாய்வுகள் இடம்பெறுவதாக இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் கூறினார். கப்பலின் டி.வி.ஆர். உபகரணம் தொடர்பிலான பகுப்பாய்வுகளும் அதில் உள்ளடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
இவை இவ்வாறிருக்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் எனும் சி.ஐ.டி. அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ள கப்பலின் உள்நாட்டு பிரதி நிதி நிறுவனத்தின் மின்னஞ்சல் கட்டமைப்பின் காப்புப் பிரதியை தற்போது அத்திணைக்களத்தின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சி.ஐ.டி.யின் டிஜிட்டல் பகுப்பாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சேனாரத்ன தலைமையில் இந்த பகுப்பாய்வு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM