(எம்.எம்.சில்வெஸ்டர் )
டோக்கியோ ஒலிம்பிக் தகுதி அடைவு மட்டத்தை எட்டுவதற்காக கஸகஸ்தானில் நடைறெவுள்ள மெய்வல்லுநர் போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் ஆறு பேரை பங்கேற்கச் செய்வதற்காக இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தினால் எடுத்த முயற்சி தோல்வில் முடிந்துள்ளதாக தெரிய வருகிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கான அடைவு மட்டத்தை அண்மித்து செல்வதற்கான வாய்ப்பு எதிர்வரும் 29 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.
நாட்டில் நிலவுகின்ற கொரோனா தொற்று அச்சுறுத்தலால் விதிக்கப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாது போனதுடன், சீரற்ற காலநிலை காரணமாக போட்டிகளில் பங்கேற்ற வீர,வீராங்கனைகளால் சிறந்த ஆற்றல்களுக்கு வரமுடியாது போயிருந்தது.
இதன் காரணமாக, டோக்கியோ ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்ட முடியாதுபோயுள்ள இலங்கை வீர, வீராங்கனைகளை கஸகஸ்தான் மற்றும் இந்தியாவில் நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டிகளில் பங்கேற்கச் செய்வதற்கு இலங்கை மெய்வல்லுநர் சங்கம் கடும் பிரயத்தனத்தை மேற்கொண்டிருந்தது.
கஸகஸ்தான் அழைப்பு மெய்வல்லுநர் போட்டி எதிர்வரும் 19 ஆம், 20 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அந்நாட்டுக்கான வீசா பெறுவதில் இழுபறி காணப்படுவதால் இலங்கை வீர, வீராங்கனைகள் குறித்த மெய்வல்லுநர் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு அற்றுப்போயுள்ளதாக தெரியவருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM