கடந்த மாதம் 26 ஆம் திகதி மெக்சிகோ நகரத்தில் மெட்ரோ வழித்தடம் உடைந்து விழுந்து மெட்ரோ ரயில் கீழே உள்ள வாகனங்கள் மீது விழுந்து பெரும் விபத்து ஏற்பட்டது. குறித்த விபத்தில் 26 பேர் உயிரிழந்தார்கள்.
நீதி கேட்டு நூற்றுக்கணக்கான மக்கள் போராட்டம் செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
நோர்வே இன்ஜினியரிங் நிறுவனமான டி.என்.வி புதன்கிழமை வெளியிட்ட ஆரம்ப அறிக்கையில், கட்டமைப்பு சீரின்மையால் மே 3 ஆ ம் திகதி ரயில் விபத்துக்குள்ளானது.
மெக்ஸிக்கோ நகர அதிகாரிகள் செய்தியாளர் கூட்டத்தில் முன்வைத்த முதற்கட்ட விசாரணைகளில் , கட்டுமானப் பணிகளில் பல குறைபாடுகளை அடையாளம் காணப்பட்டது.
அவற்றில் “முடிக்கப்படாத மற்றும் / அல்லது மோசமாக செயல்படுத்தப்பட்ட வெல்டிங்,” போல்ட் போதுமானதாக இல்லை மற்றும் வெவ்வேறு வகையான கொங்கிறீட் பயன்பாடு ஆகியவை அடங்கும்.
நகரத்தின் புதிய மெட்ரோ பாதை 2012 இல் திறக்கப்பட்டதிலிருந்து சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளது.
காரணங்களை விசாரிக்க அதிகாரிகளால் பணியமர்த்தப்பட்ட குழு, ஜூலை 14 மற்றும் ஆகஸ்ட் 30 ஆகிய திகதிகளில் மேலும் இரண்டு அறிக்கைகளை வழங்க திட்டமிட்டுள்ளது என்று மெக்சிகோ இயக்குனர் எக்கார்ட் ஹின்ரிச்சென் செய்தி மாநாட்டில் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM