(எம்.மனோசித்ரா)
ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 70 உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு பதிலாக நியமிக்கப்பட்ட புதிய உறுப்பினர்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
இவ்வாறு ஐக்கிய தேசிய கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள புதிய உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் புறக்கோட்டையிலுள்ள கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் குறித்த 70 புதிய உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியில் அங்கத்துவம் வகித்துக் கொண்டு , ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த 69 உள்ளூராட்சி உறுப்பினர்களை கட்சியிலிருந்து நீக்கியமைக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் நிராகிக்கப்பட்டது.
அதனையடுத்தே குறித்த புதிய உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM