(நா.தனுஜா)
வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டங்களை முடக்குவதற்கும் நீர்த்துப்போகச்செய்வதற்குமான நடவடிக்கைகள் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பிலும் வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முல்லைத்தீவு மாவட்டத் தலைவி மதியசுரேஷ் ஈஸ்வரியிடம் வினவியபோது அவர் கூறியதாவது:
வலிந்து காணாமலாக்கப்பட்டோர் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் அதற்காக சர்வதேச விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவந்தோம். எனினும் தற்போது தடையுத்தரவு பிறப்பித்தல், கைது செய்தல் போன்ற நடவடிக்கைகளின் ஊடாக அந்தப் போராட்டங்களை நீர்த்துப்போகச்செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதுமாத்திரமன்றி சிலவேளைகளில் போராட்டங்களில் ஈடுபடவேண்டாமென்று பகிரங்கமாகக்கூறாவிட்டாலும், போராட்டத்தில் ஈடுபடும் சாதாரண மக்களை உளவியல் ரீதியில் அச்சுறுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றன. போராட்டத்தில் ஈடுபடுகின்ற எங்களை கைது செய்து சிறையில் அடைத்தால், காணாமல்போனோருக்கான நீதியைப்பெறும் போராட்டம் முழுமையாக இல்லாமல்போய்விடும் என்பதனாலேயே தற்போது மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றோம்.
காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளராக நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸினால் எமக்கான நீதியைப் பெற்றுத்தரமுடியவில்லை. அவ்வாறிருக்கையில் முன்னாள் பொலிஸ்மா அதிபரொருவரால் எவ்வாறு எமக்கான நீதி கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்யமுடியும? அவர் எமக்கு சார்பாக செயற்படுவார் என்று எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? ஆகவே சர்வதேச விசாரணையின் ஊடாக மாத்திரமே இதற்கான தீர்வைப்பெற்றுக்கொள்ளமுடியும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம் என்று குறிப்பிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM