கொழும்பு துறைமுகத்தில் ஏற்பட்ட தீயிற்கு இறப்பர் ஹோச் குழாய்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகில் ஒட்டுதல் (வேல்டிங்) வேலைகள் இடம்பெற்றமை காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.
கொழும்பு துறை முகத்தின் கிழக்கு 'டேர்மினல்' பகுதியில் இன்று (29) பிற்பகல் பாரிய தீ பரவல் சம்பவம் ஒன்று பதிவானது.
குறித்த பகுதியில் இருந்த தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான பாவனைக்கு உதவாத இறப்பர் ஹோஸ் குழாய்கள் இருந்த இடத்திலேயே இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியெங்கும் கறும் புகை மூட்டம் காணப்பட்டதுடன் கொழும்பு மாநகர சபையின் தீ யணைப்புப் பிரிவினரும் துறைமுக தீ அணைப்புப் படையினரும் இணைந்து மூன்று மணி நேர போராட்டத்தின் பின்னர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீயை அணைக்க 10 தீயணைப்பு வண்டிகளை ஈடுபடுத்தியதாக கொழும்பு மாநகர தீயணைப்புப் படையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த தீ பரவலினால் எவருக்கும் காயங்கள் ஏற்படாத போதும், சொத்து சேதங்கள் தொடர்பில் , இதுவரை கணக்கிடப்படவில்லை சம்ப்வம் தொடர்பில் துறைமுக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM