கர்ப்பிணிப் பெண் ஒருவர் வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றிற்குள் விழுந்துள்ள நிலையில், குழந்தையை பிரசவித்துள்ளார். இந்நிலையில், குழந்தை நீரில் மூழ்கி இறந்துள்ளதாகப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கனை, பத்தாம்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய கர்ப்பிணித்தாயே இவ்வாறு கிணற்றுக்குள் வீழ்ந்துள்ளார்.
குறித்த கர்ப்பிணித் தாய் வீட்டில் இல்லாததை அவதானித்த வீட்டார் அவரைத் தேடியுள்ள நிலையில், வீட்டுத் தோட்டத்திற்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் குறித்த கர்ப்பிணித் தாயார் விழுந்து கிடந்தமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அயல் வீட்டாரின் உதவியுடன் குறித்த கர்ப்பிணிப் பெண் மீட்கப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, கிணற்றில் விழுந்துள்ள நிலையில் குழந்தை பிரசவமானமை தெரியவந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, கிணற்றில் குழந்தை மரணித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM