கொரோனா தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த அமெரிக்காவை சார்ந்த நிறுவனம் 'நோவாவாக்ஸ்' என்ற பெயரில் தடுப்பூசி ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறது. இது 90.4 சதவீத செயல்திறன் கொண்டது என அந்நிறுவனம் அறிவித்திருக்கிறது.
உலகெங்கும் பரவியுள்ள கொரோனாத் தொற்று பாதிப்பிற்கு அமெரிக்காவில் ஃபைசர், மாடர்னா, ஜோன்சன் அண்ட் ஜோன்சன் என மூன்று தடுப்பூசிகள் அவசரகால பயன்பாடு என்ற அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த நோவாவாக்ஸ் என்ற நிறுவனம் புதிய தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் சுமார் 30,000 நபர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டதில் மிதமான மற்றும் தீவிரமான கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து 100% பாதுகாப்பு அளிக்கும் என்றும், 90.4 சதவீத செயல்திறன் கொண்டது என்றும், உருமாற்றம் அடைந்த கொரோனாவிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தற்போதைய சூழலில் தடுப்பூசிக்கான தேவை குறைந்திருக்கிறது. இருப்பினும் பல சர்வதேச நாடுகளில் தடுப்பூசிக்கான தேவை அதிகரித்திருக்கிறது. எனவே அமெரிக்க மருந்து கட்டுப்பாட்டு துறையின் அனுமதி கிடைத்தவுடன் உலகிலுள்ள வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளுக்கு இந்த தடுப்பூசிகளை விற்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நோவாவாக்ஸ் தடுப்பூசியை இருப்பு வைப்பதும், எடுத்துச் செல்வதும் எளிது எனவும், இந்த தடுப்பூசியை இந்தியாவைச் சேர்ந்த சீரம் இந்தியா நிறுவனம் தயாரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தற்போது உலக அளவில் கொவிஷீல்ட், கொவாக்சின், சினோபார்ம், ஸ்புட்னிக் வி, ஃபைசர், மாடர்னா, ஜோன்சன் அண்ட் ஜோன்சன் என பல வகையான தடுப்பூசிகள் மக்களின் பயன்பாட்டில் உள்ளன. மேலும் சில தடுப்பூசிகள் ஆய்வு நிலையில் உள்ளன. அத்துடன் பல நாடுகள் கொரோனா தொற்றுக்கு ஒரே டோஸ் அளவிலான தடுப்பூசியை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு இருக்கின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் ஒன்று, 'நோவாவாக்ஸ்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தவிருக்கும் கொரோனா தடுப்பூசி வளர்ச்சி அடைந்துவரும் நாடுகளில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டொக்டர் அருண்குமார்.
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM