(எம்.மனோசித்ரா)
நாட்டில் ஏற்கனவே இடம்பெற்ற மரணங்களுடன் இணைந்து கொவிட் மரணங்களின் எண்ணிக்கையை நாளாந்தம் அறிவித்து வந்தோம்.
எனினும் இனிவரும் நாட்களில் கடந்த 48 மணித்தியாலங்களுக்குள் அல்லது 24 மணித்தியாலங்களுக்குள் பதிவாகும் சகல மரணங்களையும் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்தார்.
பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பதிவான மரணங்கள் கூட கடந்த வாரமே அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறா நிலைமை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று திங்கட்கிழமை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது.
இதேவேளை இன்று திங்கட்கிழமை 67 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டன. இவை கடந்த சனிக்கிழமை பதிவானவை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 2203 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இன்று திங்கட்கிழமை 2,259 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய நாட்டில் 225 897 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 188 547 பேர் தொற்றிலிருந்து முழுமையாக குணமடைந்துள்ளதோடு , 34 735 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM