இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி வரும் 'பிசாசு 2' படத்தில் கதையின் நாயகியாக நடித்து வரும் நடிகை ஆண்ட்ரியா, ஆடை இல்லாமல் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகி, நடிகை என பன்முக திறமை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. கதாநாயகியாகவும், கதையின் நாயகியாகவும், கவர்ச்சி நாயகியாகவும் என பல்வேறு ஒப்பனைகளில் திரையில் தோன்றி ரசிகர்களை தன்வயப்படுத்துபவர்.
'தரமணி', 'வடசென்னை' உள்ளிட்ட பல படங்களில் அதிரடியாக நடித்து ஆச்சரியப்படுத்திய வரும் கூட. இவர் தற்போது மிஷ்கின் இயக்கத்தில் தயாராகி வரும் 'பிசாசு 2' என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா காலகட்டத்தில் இடைநிறுத்தம் செய்யப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நடைபெறும் என்றாலும், அண்மையில் நிறைவடைந்த படப்பிடிப்பில் இவர் ஆடை இல்லாமல் நிர்வாணமாக நடித்திருக்கிறார் என செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
இது குறித்து படக்குழுவினர் தெரிவிக்கையில்,' திரைக்கதையில் முக்கியமான காட்சி என்பதாலும், அதன் தேவை கருதி இத்தகைய காட்சி இடம்பெற்றது. இதனை உணர்ந்து நடிகை ஆண்ட்ரியா முழுமையாக ஒத்துழைப்பு வழங்கினார்.' என தெரிவித்தனர். ஆனால் இதற்காக அவர் தனியாக ஊதியம் பெற்றதாக திரையுலகினர் தெரிவிக்கிறார்கள்.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான ‘பிசாசு’ முதல் பாகத்தில் பேயை நேர்மறையான எண்ணம் கொண்ட பேயாக சித்தரித்திருந்தார் என்பதும், இந்தப்படத்திலும் அதேபோல் வித்தியாசமாக பேயை சித்தரித்திருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM