சி.அ.யோதிலிங்கம்
தமிழ்ப் பிரதேசங்களில் கொரோனா கொத்தணிப் பரவல் என்கின்ற நிலையிலிருந்து சமூகப் பரவல் என்ற நிலைக்கு மாறியுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் மட்டும் மூவாயிரத்து எழுநூறு பேர் வரை தொற்றுக்குள்ளாகி இருக்கிறனர். இதுவரை ஐம்பது பேர் வரையானோர் மரணமடைந்திருக்கின்றனர்.
இந்தக் கொரோனா தமிழ் மக்களின் சொத்தாக இருக்கும் கல்வியாளர்களையும் விட்டுவைக்கவில்லை. யாழ் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் சிறீரஞ்சினி ஆனந்த குமாரசுவாமி கொரோனாவினால் மரணமடைந்திருக்கிறார். இவரது இழப்பு தமிழ் கல்வியுலகத்திற்கு மிகப் பெரும் இழப்பாகும். இவ்வாறான இழப்புக்களைத் தொடர்ந்தும் அனுமதிக்கப் போகிறோமா?
தமிழ்ப் பிரதேசங்களில் ஆரம்பகால விழிப்புநிலை தற்போதில்லை, ஆரம்ப காலங்களில் சுகாதாரப் பிரிவினர் மட்டுமல்ல மக்களும் விழிப்பு நிலையில் இருந்தனர். யாழ். மாவட்டத்தில் மதகுருவினால் கொரோனா கொத்தணி உருவான போது சுகாதாரப்பிரிவினருடன் மக்களும் இணைந்த சமூகப்பரவலாக வளராமல் பார்த்துக் கொண்டனர். இளைஞர்கள் திரளாக நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். தேர்தல் காலமாக இருந்தபடியால் தமிழ் அரசியல் கட்சிகளும் அக்கறையுடன் நிவாரணச் செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தன.
தற்போது அவ்விழிப்பு நிலை வெகுவாகக் குறைந்துள்ளது. அரசியல் கட்சிகள் வெறும் பார்வையாளர்களாக மாறியுள்ளன. சுகாரதாரப் பிரிவு சோர்வடைந்துள்ளது. பொது அமைப்புக்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாககத் தெரியவில்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மட்டும் சில நிவாரணப்பணிகளை மேற்கொள்கின்றது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-13#page-10
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM