கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவி வெளிநாடுளுக்கு தப்பிச் செல்ல முயன்ற 27 இலங்கையர்கள் இந்திய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் இருந்து கடல் வழியாக தமிழகம் சென்று தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல திட்டமிட்டு கடந்த 27 ஆம் திகதி இலங்கை புத்தளம் மாவட்டம் சிலாபத்துறையிலிருந்து 24 ஆண்கள் இரண்டு பெண்கள் ஒரு குழந்தை என மொத்தமாக 27 பேர் கடல்வழியாக சட்டவிரோதமான முறையில் தூத்துக்குடி சென்றடைந்துள்ளனர்.
தூத்துக்குடிக்கு சென்ற 27 பேரும் மதுரையில் தங்கி அங்கிருந்து கேரளா வழியாக கனடா செல்ல திட்டமிட்டிருந்தனர்.
இது குறித்து இந்திய பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து ராமநாதபுரம் மற்றும் மதுரை க்யூ பிரிவு பொலிஸார் இன்று 27 பேரையும் மதுரையில் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்ட 27 பேருக்கு கடவுச்சீட்டு இல்லாமல் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் நுழைந்ததாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் 27 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதனிடையே இலங்கையில் இருந்து கனடா செல்ல மங்களூர் சென்ற 34 இலங்கையர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM