எரிபொருட்களின் விலைகள் இன்று இரவு முதல் அதிகரிக்கப்படுவதாக எரி சக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (சிபெட்கோ) தீர்மானித்துள்ளது.
இதன்படி இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 92 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 20 ரூபாவாலும் 95 ஒக்டெய்ன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 23 ரூபாவாலும் ஓட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 7 ரூபாவாலும் சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 12 ரூபாவாலும் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதன்படி ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலின் விலை 157 ரூபாவாகவும் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலின் விலை 184 ரூபாவாகவும் ஒரு லீற்றர் டீசல் 111 ரூபாவாகவும் ஒரு லீற்றர் சுப்பர் டீசல் 144 ரூபாவாகவும் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படவுள்ளது.
இதேவேளை, லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் எரிபொருட்களின் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் (சிபெட்கோ) விலைகளுக்கு ஏற்ப அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM