மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மூன்று பகுதிகள் இன்று (11) மதியம் முடக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், மீராவோடை மேற்கு, மீராவோடை கிழக்கு மற்றும் மாஞ்சோலை ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த கிராம சேவகர் பிரிவுகளில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.
அத்தோடு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது ஏராளாமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 64 வயதுடைய நபர் ஒருவரும் கொரோனா தொற்றினால் மரணமடைந்திருந்தார்.
இவ்வாறான நிலைமையைக் கருத்தில் கொண்டு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், பொதுமக்கள் வெளியேறாத வகையில் குறித்த பகுதிகளிலுள்ள பிரதான மற்றும் உள் வீதிகள் தடைகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளன.
அத்துடன் குறித்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM