ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் 3 பகுதிகள் முடக்கம் 

Published By: Digital Desk 4

11 Jun, 2021 | 04:47 PM
image

மட்டக்களப்பு கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மூன்று பகுதிகள் இன்று (11) மதியம் முடக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், மீராவோடை மேற்கு, மீராவோடை கிழக்கு மற்றும் மாஞ்சோலை ஆகிய மூன்று கிராம சேவகர் பிரிவுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரும் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த கிராம சேவகர் பிரிவுகளில்  நாளாந்தம் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.

அத்தோடு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது ஏராளாமான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதுடன், 64 வயதுடைய நபர் ஒருவரும் கொரோனா தொற்றினால் மரணமடைந்திருந்தார்.  

இவ்வாறான நிலைமையைக் கருத்தில் கொண்டு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த 9 ஆம் திகதி நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில், பொதுமக்கள் வெளியேறாத வகையில் குறித்த பகுதிகளிலுள்ள பிரதான மற்றும் உள் வீதிகள் தடைகள் போட்டு மறிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் குறித்த பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் கடமையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22