சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் மேலும் 1,038 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் அதிகளவான கைதுகள் குளியாபிட்டியவில் இடம்பெற்றுள்ளது.
குளியாபிட்டியவில் 133 பேரும், இரத்தினபுரியில் 125 பேரும் மாத்தறையில் 89 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த குற்றச்சாட்டுக்காக கடந்த ஒக்டேபர் 30 முதல் இதுவரையான காலப் பகுதியில் மொத்தம் 29,015 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ட்ரோன் கமரா கண்காணிப்பு மூலம் அத்துருகிரிய பகுதியில் தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதேசமயம் மேல் மாகாணத்தின் 14 நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் 4,962 நபர்களுடன் 3,111 வாகனங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM