மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டுவரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்தில் கொள்ளை : 7 பேர் கைது

Published By: Digital Desk 2

10 Jun, 2021 | 12:57 PM
image

செ.தேன்மொழி

மன்னார் பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தில் மின்னிணைப்பிற்கு உபயோகிக்கும் கம்பி கேபிள்களை (cable wire) கொள்ளையிட்டமை தொடர்பில் , மின் உற்பத்தி நிலையத்தின் பாதுகாப்பு பிரிவில் கடமை புரிந்து வந்த உத்தியோகத்தர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் ,

அதே பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது மின் உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான 340 மீட்டர் நீளமான கம்பி வடங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றுவரும் காற்றலை மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மானப் பணிகளை தனியார் நிறுவனம் ஒன்றே முன்னெடுத்து வருகின்றது. 

இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50