திருகோணமலை - வரோதய நகர் துவரங்காட்டு பகுதியில் சட்ட விரோதமான முறையில் சாராயம் காய்ச்ச முயன்ற 3 பேரையும் அதற்குப் பயன்படுத்தும் (கசிப்பு காய்ச்ச தேவையான) 8 பரள் கோடாவையும் திருகோணமலை மாவட்ட மது வரித்திணைக்கள அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைப்பினை மேற்கொண்ட போது நேற்று (09) கைதுசெய்ததாக மாவட்ட மது வரித்திணைக்கள பொறுப்பதிகாரி ஜே.எஸ்.பி.அத்தநாயக்க தெரிவித்தார்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் வரோதய நகர் பகுதியை சேர்ந்த 25 வயது தொடக்கம் 33 வயதுக்குட்பட்ட குடும்பஸ்தர்கள் எனவும் தெரியவருகிறது.
இதன்போது 6 ஆயிரம் மில்லி லீற்றர் கோடா மற்றும் 7500 மில்லி லீற்றர் கசிப்பு என்பனவும் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் மேலும் மது வரித்திணைக்களத்தினர் தெரிவித்தனர்.
குறித்த சுற்றிவளைப்பில் மது வரித்திணைக்கள பரிசோதகர் பீ.காந்தீபன், சாஜன் எஸ்.ஜனானந்தா,கோப்ரல் சமன்த பண்டார, காவலாளர் ருவான் சமிந்த உள்ளிட்டவர்கள் அடங்குவர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM