மீன் ஏற்றுமதியாளர்கள் போன்று நடித்து நான்கு கிலோ கஞ்சாவை மிகவும் சூட்சுமமாக மறைத்து எடுத்து சென்ற ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த மீன் வாகனத்தில் இவ்வாறு கஞ்சா பொதி எடுத்து செல்லப்படுவது தொடர்பில் கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலிற்கு அமைவாக சோதனை மேற்கொள்ளப்பட்ட போதே இவ்வாறு கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் நோக்கி பயணித்த குறித்த வாகனத்தை ஆனையிறவு சோதனைச்சாவடியில் விசேட அதிரடிப்படையினர் சோதனைக்குட்படுத்தினர். இதன்போது சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட 4200 கிராம் கஞ்சா பொதியை மீட்டனர்.
குறித்த சம்பவத்துடன் கடத்தலுடன் தொடர்புடைய வாகன சாரதி மற்றும் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டதுடன், வாகனத்தையும் கைது செய்யப்பட்ட நபர்களையும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM