இலங்கையின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்பை வழங்க நாம் என்றும் தயார்: இந்திய உயர்ஸ்தானிகர்

Published By: J.G.Stephan

09 Jun, 2021 | 04:00 PM
image

(நா.தனுஜா)
எமது கடற்பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான கட்டமைப்புக்களையும் ஒன்றிணைந்து உருவாக்குவதும் அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதும் இன்றியமையாததாகும். 

இதுவிடயத்தில் இலங்கையும் இந்தியாவும் மிகநெருங்கிச் செயலாற்ற வேண்டியதன் அவசியத்தை அண்மையில் நியூ டயமன்ட் கப்பல் மற்றும் எம்.வி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட அனர்த்தம் தெளிவாகப் புலப்படுத்தியுள்ளது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.

இலங்கை முதலீட்டுச்சபை, இலங்கை வர்த்தகப்பேரவை மற்றும் கொழும்புப் பங்குச்சந்தை ஆகியவற்றின் ஒன்றிணைந்த ஏற்பாட்டில் திங்கட்கிழமை ஆரம்பமான இலங்கை முதலீட்டுப்பேரவை மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. இதில் நாடுகளுக்கு இடையிலான முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பான கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையானது அதன் பிரஜைகள் அனைவருக்கும் நல்வாழ்வையும் சுபீட்சத்தையும் பெற்றுக்கொடுப்பதற்கான உறுதிப்பாட்டைக் கொண்டிருக்கிறது என்பது இந்த மாநாட்டின் மூலம் வெளிப்பட்டுள்ளது.

 இந்த மாநாட்டின் முதல்நாள் நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஏனைய நாடுகள் இலங்கையில் முதலீடு செய்வதற்கு அவசியமான வசதிவாய்ப்புக்கள் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதனூடாக இலங்கையினால் எதிர்பார்க்கப்படும் உற்பத்தி மற்றும் பொருளாதார இலக்குகளையும் அடைந்துகொள்ள முடியும்.

இலங்கையில் நீண்டகால, நெருங்கிய நட்புறவு நாடாக இந்தியா இருந்து வருகின்றது. இந்நிலையில் தற்போது முதலீட்டுப்பேரவை மாநாட்டில் ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அழைப்பினை ஏற்றுக்கொள்வதற்கும் இலங்கையுடன் மேலும் நெருக்கமான ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கும் இந்தியா தயாராக இருக்கின்றது.

உலகளாவிய ரீதியில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அனைத்து நாடுகளும் பாரிய நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இவ்வாறானதொரு நேர்மறையான முயற்சி இன்றியமையாததாகும். ஏனெனில் நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு பல்வேறு துறைகள் சார்ந்தும், வெவ்வேறு நாடுகளைப் பங்காளிகளாக ஒன்றிணைந்து இயங்குவதன் மூலம் முன்னேற்றமடைவது என்பது கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் தற்காலத்தில் மிகவும் முக்கியமானதாகும்.

கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட நெருக்கடியின்போதும் கூட, இரு நாடுகளுக்கும் இடையிலான வணிக வெளிப்பாய்ச்சல்கள் நிலைத்த மட்டத்தில் பேணப்பட்டமையானது இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான வலுவான வணிகத்தொடர்புகளை எடுத்துக்காட்டுகின்றது. இலங்கையின் தேசிய வர்த்தகக்கொள்கையானது இரு நாடுகளுக்கும் இடையிலான வணிகத்தொடர்புகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் அமையும் என்று நம்புகின்றோம் என்றார். 

மேலும்,  இலங்கையின் சுபீட்சத்திற்கான ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராக இருக்கும் அதேவேளை, எமது பொதுவான கடற்பிராந்தியத்தைப் பாதுகாப்பதற்கு அவசியமான கட்டமைப்புக்களையும் ஒன்றிணைந்து உருவாக்குவது அவசியமாகும் என்றும் குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37