(எம்.மனோசித்ரா)
எதிக்கட்சி என்பது பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுவதல்ல. தற்போது தமக்கான உண்மையான எதிர்க்கட்சி எதுவென்பதை மக்கள் ஏற்கனவே தீர்மானித்துவிட்டனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் , எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து கேள்வியெழுப்பிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,
நாட்டுக்கு பொறுத்தமான எதிர்க்கட்சி எதுவென்பதை மக்கள் தீர்மானித்து விட்டனர். பாராளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு மக்கள் தமக்கான எதிர்க்கட்சியை தெரிவு செய்வதில்லை.
மக்கள் அவர்களது உண்மையான எதிர்க்கட்சியை தெரிவு செய்வார்கள். எது உண்மையான எதிர்க்கட்சி என்பதும் , எந்த எதிர்க்கட்சி அவர்களின் தேவையை பொறுப்பையும் நிறைவேற்றுகிறது என்பதும் மக்களின் மனதில் தெளிவாகவுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM