கொவிட் தொற்றினால் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமாகவில்லை - இராணுவத் தளபதி

Published By: Digital Desk 3

09 Jun, 2021 | 02:00 PM
image

இலங்கை முதலீட்டு சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்று வரும் (ஜூன் 7-9) இணைய வழி செயலமர்வின் 2 வது நாள் அமர்வில் அழைப்பு பேச்சாளராக பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா கலந்துக்கொண்டார்.

இலங்கையில்  கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் (NOCPCO) தலைவராக கொவிட் 19 தொற்றுநோயை நிர்வகித்தல், வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை பாதுகாத்தல் என்ற தலைப்பில் உரையாற்றுவதற்கான வளவாளர்களில் ஒருவராக அவர் அழைக்கப்பட்டார்.

ஆசியாவின் அடுத்த சொர்க்கம் - இலங்கை என்ற கருப்பொருளிலான கருத்தரங்கில் 65 க்கும் மேற்பட்ட நாடுகள் பங்குபற்றினர். 

கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தொழில்துறை மற்றும் வணிக முன்னேற்றத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சேவை வசதிகளை கட்டியெழுப்புதலை நிறுத்தவில்லை. இலங்கையின் முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்கள் தொற்றுநோய் காரணமாக தாமதமாகவில்லை.

மேலும், தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஒருபோதும் குறைக்கப்படவில்லை. பாதுகாப்பான சுற்றுலா துறைக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். இலங்கை ஒரு பாதுகாப்பான இடமாக இருப்பதற்கு நீண்ட கால மற்றும் குறுகிய கால சுற்றுலா பயணிகளுக்கு உத்தரவாதம் அளிக்கின்றது. சுற்றுலா, விளையாட்டு மற்றும் இராஜதந்திர வருகைகளில் 'பயோ செக்யூர் பப்பில்' (உயிரியல் பாதுகாப்பு செயன்முறை) முறையை உருவாக்கி மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

தரையிறங்களில் இருந்து  புறப்படும் வரை உயிர்க்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதில் இலங்கை தனது திறன்களை நிரூபித்துள்ளது. இந்த விடயத்தில், நாங்கள் நவீன மற்றும் தரமான சேவையை வழங்க உட்கட்டமைப்பு, போக்குவரத்து, உணவு மற்றும் பானம் மற்றும் சுகாதார வசதிகளை மறுசீரமைத்துள்ளோம் என ஜெனரல் ஷவேந்திர சில்வா சுட்டிக்காட்டினார்.

"இலங்கை இந்து சமுத்திரத்தில் மத்தியில் அமைந்துள்ள நாடாக இருப்பதால் கடல் போக்குவரத்து, நிரப்பல் நடவடிக்கைகள் மற்றும் மீள் ஏற்றுமதிகள் ஆகியவற்றிக்கு பெறுமதி வாய்ந்த இடமாகும் . மேலும், உலக நட்பு நாடுகளின் எதிர்பார்ப்புகளையும், பொருட்களின் தடையின்றிய கடல் போக்குவரத்தை வழங்குவதன் அவசியத்தையும் நாங்கள் மதிக்கிறோம்.

கொவிட்க்கு எதிரான போரின் தொடக்கத்திலிருந்தே இந்த அம்சங்கள் மீது பரந்தளவான கவனம் செலுத்தப்பட்டது அனைத்து பங்குதாரர்களின் மதிப்புமிக்க பொருளாதார உள்ளீடுகள் தொற்றுநோய் பரவலுக்கு மத்தியில் தொடர்ந்தும் செயல்பட்டு வந்தன. அதன்படி, சுகாதார பாதுகாப்பு துறைமுக ஊழியர்களின் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இப்போது துறைமுக நடவடிக்கைகளை நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.

முன்னோக்கி மூலோபாயம் பற்றி பேசுகையில் இரண்டு அம்சங்களை முன்வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, இந்த தொற்று சூழ்நிலையில் இலங்கையை சிறப்புறச் செய்வது எது? இரண்டு தொற்றுநோய்க்குப் பிந்திய காலகட்டம் நமக்கு முன்னால் நிற்கின்றது. நான் முன்பு கூறியது போல முதலில் இலங்கை உலக வரைபடத்தில் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் முக்கியமான கேந்திர நிலையத்தில் அமைந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

இது இந்து சமுத்திரத்தில் மத்தியில் அமைந்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இரண்டாவது கொவிட் 19 தொற்றுநோயால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொவிட் 19 தொற்றுநோயிலிருந்து ஒரு படிப்பினை எடுத்துக் கொண்டு, புதிய பொருளாதார, வணிக, தொழில்துறை மற்றும் சேவை பங்காளர்களுக்கு அவர்களின் பொருளாதாரத்தின் பின்னடைவிலிருந்து மீள்வதற்கு உறுதி வழங்க வேண்டும். 

இலங்கையின் அமைவிடம் குறித்து மிகைப்படுத்தினால் இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள பங்காளிகளுக்கு பரஸ்பர நன்மைகளைப் பெறக்கூடிய வாய்ப்புகளை அடையாள காண முடியும் என  நான் நம்புகிறேன், இலங்கை தனித்துவமானது மற்றும் இன்றைய நிலவரப்படி பொருளாதார பங்காளர்களுக்கு வாய்ப்பான நிலம். ஆகவே, உலகெங்கிலும் உள்ள வணிக பங்காளர்களுடன் பயனளிக்கும் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை உருவாக்குவதே எமது எதிர்கால தேவை என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

அவரது முழு உரையின் சாரம்சம் பின்வருமாறு,

"இந்த முதலீட்டாளர்கள் சபையில் இன்று உரையாற்றுவது ஒரு பாக்கியம் என்று நான் கருதுகிறேன், பாதுகாப்புப் பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான என்னை உரையாற்ற அழைத்தமைக்கு அமைப்பாளர்களுக்கு எனது நன்றி. இலங்கையில் 19, கொவிட் 19 தொற்றுநோயை நிர்வகித்தல், வாழ்க்கை, வாழ்வாதாரம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை பாதுகாத்தல் பற்றிய எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

நாம் அனைவரும் அறிந்தபடி, கொவிட் 19 தொற்றுநோய் உலகின் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் பாதிப்படைய செய்துள்ளது. இது மனிதகுலத்தின் சமூக மற்றும் பொருளாதார நல்வாழ்வுக்கு கணிசமான அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக ஏற்பட்ட பொருளாதார பின்னடைவு இருந்தபோதிலும் இந்த தொற்றுநோய் மனித வாழ்வின் பாதுகாப்பிற்கு இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சவால் விடுத்துள்ளது.

ஒன்றிணைக்கப்பட இந்த உலகில், வாழ்வாதாரத்தை தனிமையில் வடிவமைக்க முடியாது. உலகத்துடன் பொருளாதார, இராஜதந்திர மற்றும் சமூக உறவுகளைப் பேணுவது அவசியம். இதனால் தொற்றுநோயை நிர்வகித்தல், பொருளாதாரத்தைப் பாதுகாத்தல் மற்றும் முழுமையான இயல்புநிலையை மீட்டெடுப்பது மிகப்பெரிய சவால் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

கொவிட் 19 தொற்றுநோய்களுக்கு மத்தியில் பொருளாதார இயல்புநிலை, வழக்கமான வாழ்வாதாரம் மற்றும் சமூக அம்சங்களை மீண்டும் நிலைநிறுத்துவதற்காக, குறைந்தபட்ச விதிமுறைகளின் கீழ் சிறந்த நடைமுறைகளுடன் சமூக-பொருளாதார நடவடிக்கைகள் தொடரக்கூடிய ஒரு குறிப்பிட்ட நிலைக்கு நாட்டை கொண்டு வருவது தீர்க்கமானதாகும்.

இலங்கை சூழலில் இந்த நிகழ்வின் அவசியத்தை மேதகு ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் நன்கு உணர்ந்துள்ளனர். தெற்கு பதிலளிக்கும் யுத்தியாக முதலில் பரவலின் சங்கிலியை உடைப்பது அடிப்படையானது. இரண்டாவது பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்படாதவர்களிடமிருந்து பிரித்தல் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை தனிமைப்படுத்துவதன் மூலம் பரவலைக் கட்டுப்படுத்துதல்; மூன்றாவதாக, உயிர் இழப்பைக் குறைக்க பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை வழங்கல்; நான்காவதாக, பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக வருவாய் இழப்பை குறைத்தல், மருத்துவம் மற்றும் பிற தேவைகளை அணுகுவதில் உள்ள சிரமங்களை குறைத்தல்; ஐந்தாவது, தடுப்பூசி மூலம் மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கல் என்பன வைரஸுக்கு எதிரான பாதுகாப்பிற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட சிறந்த வழிமுறைகளாகும்; இறுதியாக, தொற்றுநோய்களின் போது பிந்திய பொருளாதாரம் ,வாழ்வாதாரத்தை பராமரித்தல் மற்றும் முன்னேற்றம்.

இலங்கையில் கொவிட் 19 க்கு எதிரான நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்காக எனது தலைமையிலான கொவிட் 19 யை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம், மேதகு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட தேசிய அமைப்பாகும். இது சுகாதாரம் ,மருத்துவம், இராணுவம், சட்ட அமலாக்க முகவர், பொருளாதார நிபுணர்கள், அனர்த்த முகாமைத்துவ அலகுகள், நிர்வாக மற்றும் சமூக அமைப்புகளின் அதிகாரிகள் என்போரைக் கொண்டது.

இதற்கு மேலதிகமாக  பொருளாதார அபிவிருத்தி  மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி பணிக்குழுவையும் ஜனாதிபதி நியமித்துள்ளார். பொருளாதாரம் மற்றும் மக்களின் சமூக நல்வாழ்வு கொவிட் 19 ஐத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தில், மருத்துவ உட்கட்டமைப்பு, கட்டுப்பாடுகளின் அளவு, பகுதிகளை தனிமைப்படுத்துதல், வாழ்வாதாரத்தை எளிதாக்குதல் போன்ற பரிந்துரைகள் நிகழ்நேர மற்றும் புதுப்பித்த உண்மைகள் தொடர்பாக கவனம் கொள்ளப்படுகின்றது.  

அதன்பிறகு ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட முடிவுகள் கீழ்மட்ட நடவடிக்கை எடுப்பதற்காக கீழ்நோக்கி பரப்பப்படுகின்றன. எனவே, நாட்டின் மிக உயர்ந்த அதிகாரிகளால் வழிநடத்தப்படும் கொவிட் 19 க்கு எதிராக போரிடுவதற்கு மிகவும் விரிவான மற்றும் ஒத்திசைவான ஒரு அமைப்பைக் கொண்டுவருவதற்கான அனைத்து முயற்சிகளையும் நாங்கள் செய்கிறோம் என்று என்னால் கூற முடியும்.

இந்த நுட்பங்கள் விதிகளைத் விதிப்பது, சிறந்த நடைமுறைகளை ஊக்குவித்தல், தொடர்புத் வழிகளை இணங்காணல், தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் செயல்முறை ஆகியவற்றால் செயல்படுத்தப்படுகின்றது. இராணுவ மற்றும் தேசிய உளவுத்துறை ஒத்துழைப்புடன் பொது சுகாதார அதிகாரிகளால் தொடர்புத் வழிகளை விரைவாக்க பயன்படுத்தப்படுகின்றன.

இராணுவம், சுகாதார அதிகாரிகளின் உதவியுடன், தனிமைப்படுத்தல் மற்றும் தனிமைப்படுத்தல் செயல்முறையை முன்னெடுத்துச் செல்கிறது, அங்கு பாதுகாப்புப் படைகள் தனிமைப்படுத்தல் வசதிகளை உருவாக்கி பராமரிக்கின்றன மற்றும் தீவு முழுவதும் தனிமைப்படுத்தல் மையங்களை செயற்படுத்தல் பாதுகாப்பு மற்றும் மருத்துவ உதவிகளையும் வழங்குகின்றன.

பாதிக்கப்பட்டவர்களை பாதிக்கப்படாதவர்களிடமிருந்து பிரிப்பதன் மூலமும், வெளிப்படும் மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களை தனிமைப்படுத்துவதன் மூலமும் பரவலைக் கட்டுப்படுத்துவதில், சுகாதாரப் அதிகாரிகளின் வழிகாட்டுதலின் கீழ் இடைநிலை பராமரிப்பு மையங்களை நிறுவுவதற்கும் நிர்வகிப்பதற்கும் இராணுவம் உதவுகிறது.

மேலும் நாங்கள் இலங்கையில் வாழும் சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டவர்கள் மற்றும் வணிகப் பங்காளர்களை ஒருபோதும் புறக்கணித்ததில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தொற்றுநோய்களின் தொடக்கத்திலிருந்தே இதுபோன்ற பணியாளர்களைப் பற்றி நாங்கள் சிறப்புக் கருத்தில் கொண்டுள்ளோம், நாங்கள் அவர்களை இலங்கை குடிமக்களாக கவனித்து அவர்களின் நல்வாழ்வை உறுதிப்படுத்தியுள்ளோம்.

இன்றைய நிலவரப்படி, உயிர் இழப்பைக் குறைக்க சுகாதாரப் பாதுகாப்பு அதிகாரிகள் பெரும் முயற்சி செய்கிறார்கள். பாதிக்கப்பட்ட அனைத்து தொற்றாளர்களுக்கும் அவர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான சிறந்த சிகிச்சைகள் மற்றும் வசதிகளை எங்களால் வழங்க முடிகின்றது.

இலங்கையில் தொற்றுநோய் மற்றும் பொருளாதார குறைபாடுகள் காரணமாக மக்களின் துன்பங்களை குறைப்பதன் மூலம், இயல்பு வாழ்க்கையினை பேணுதல், தகவல்களை சேகரித்தல், அறிக்கை செய்தல் மற்றும் அதிகாரிகளுக்கு பரிமாற்றுவதற்கும் அரசாங்க நிர்வாக அமைப்புக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது, இதனால் அத்தியாவசியங்கள் மக்களுக்கு தடையின்றி வழங்கப்படுகின்றன தனியார் நிறுவனங்களும் அரச பொறிமுறைக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.

அரசாங்கத்தின் முக்கிய இலக்காக இருந்த தடுப்பூசி வழங்கும் திட்டம் வைரஸ் பரவுவதையும் கருத்தில் கொண்டு முழு தீவையும் உள்ளடக்கியதாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது, அங்கு அரசாங்கங்களின் நல்ல இராஜதந்திர உறவுகள் காரணமாக தடுப்பூசிகள் நிறைய கிடைக்கின்றன. மேலும், எதிர்காலத்திலும் போதுமான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

இதன் மூலம், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் கொவிட் 19 இலிருந்து 2022 ஆம் ஆண்டின் முற்பகுதிக்குள் ஒட்டுமொத்த மக்களையும் பாதுகாக்க எதிர்பார்க்கிறோம். தொழிலாளர்கள், பொருளாதாரத் தூண்கள், பொருளாதார சகாக்கள் மற்றும் பொது மக்கள் நாட்டை முன்னேற்றத்திற்காக இயக்க ஆரம்பிப்பர். கொவிட் 19 இன் முதல் மற்றும் இரண்டாவது அலைகளை நாங்கள் திறம்பட நிர்வகித்துள்ளோம். மூன்றாவது அலையை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும் பணியில் நாங்கள் இதுவரை இருக்கிறோம்.

கொவிட் 19 என்பது ஒரு சுகாதார பிரச்சினை மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொற்றுநோயை நிர்வகிப்பது என்பது அடிப்படையில் பொருளாதாரத்தையும் வாழ்வாதாரத்தையும் நிர்வகிப்பதாகும். மேலும் ஒரு தொற்று நோயினால் பொருளாதாரத்திலும் பின்னடைவு ஏற்படும். எனவே, நாட்டின் பொருளாதாரத்தை இயக்குவதற்கு உள்ளூர் மற்றும் சர்வதேச பொருளாதார நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை அரசாங்கம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடவில்லை.

அதிமேதகு ஜனாதிபதியின் தொலைநோக்குத் தலைமையின் கீழ் அரசாங்கம், ஆரம்பத்தில் பொருளாதாரக் குறிகாட்டிகளை அடையாளம் கண்டது. தொற்றுநோயுடன் போராடுகிற போதும் பொருளாதாரத்தின் வளர்ச்சியை தக்க வைத்துக் கொள்ளும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு உகந்த சூழலைப் பாதுகாப்பதே இதன் அடிப்படையாகும்.

அன்றாட ஊதியம் பெறுபவர்கள் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்திற்கு பெருமளவில் பங்களிக்கும் ஆடைத் துறை என்பன பெறுமளவு பாதிக்கப்படுகின்றன. நம்மைப் போன்ற சிறிய நாட்டின் மிகவும் வலுவான பொருளாதாரம் இன்மையால் நாட்டை நீண்ட காலத்திற்கு மூட முடியாது.

இந்த தொற்றுநோய்களின் போது பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக அதிக திறனை நாங்கள் இதுவரை பராமரிக்க முடிந்தது என்று நான் நினைக்கிறேன். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிடத்தக்க சிந்தனையை வழங்க வேண்டியது இங்குதான். தொற்றுநோய்க்கு மத்தியில், உள்நாட்டு தயாரிப்புகளை மேம்படுத்துதல், உணவு மற்றும் சேவைகளில் தன்னிறைவு அடைதல், மற்றும் ஏற்றுமதி , பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை அதிகரித்தல் ஆகியவற்றை அதிகரிப்பை வலியுறுத்தினோம். சிறு, நடுத்தர மற்றும் பெரிய வணிக பங்காளருக்கு தேவையான நிதி, சட்ட மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் அரசாங்கம் ஊக்குவித்து அதிகாரம் அளித்துள்ளது.

எனவே, தொழில்துறை, விவசாயம் மற்றும் சேவை அடிப்படையிலான வாய்ப்புகளை ஆராய்ந்து உள்வாங்க இலங்கை தயாராக உள்ளது என்றும், தொற்றுநோய்களுக்கு மத்தியில் எங்களைப் போன்ற ஒரு நாட்டிற்கு இத்தகைய அடையாளங்களை அடையவும், இது சுகாதாரத்திற்கும் பொருளாதாரத் துறைகளுக்கும் இடையிலான ஒரு சீரான அணுகுமுறையாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

தொற்றுநோய்க்கு முன்னர் தேசிய பொருளாதாரத்தை பாதுகாப்பது இலங்கைக்கு ஒரு தீர்க்கமான காரணியாக இருந்து வருகிறது மேலும் இது தொற்றுநோய்க்கு பிந்திய காலத்திலும் இருக்கும். தேசிய பொருளாதாரத்தின் வெளி மற்றும் உள்ளக அம்சங்களுக்கு சமமான முக்கியத்துவம் அளித்துள்ளோம். கொவிட் 19 பரவுவதைக் கட்டுப்படுத்த பயணக் கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், பொருளாதார மற்றும் பொருளாதார தொடர்பான நடவடிக்கைகளுக்கு நாடு ஒருபோதும் மூடப்படவில்லை என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

எங்கள் தொற்று விவசாயம், தொழில்கள், தொழிற்சாலைகள், ஏற்றுமதி முகவர் நிலையங்கள் மற்றும் சர்வதேச வணிகங்கள் தடையின்றி இயங்குகின்றன. அங்கு ஊழியர்கள் தொற்றுநோய்களுக்கு மத்தியில் தேவையான அனைத்து சுகாதார முன்னெச்சரிக்கைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வசதிகளுடன் பணியாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளனர். இது இதுவரை இலங்கையின் பலமாக இருந்து வருகிறது.

இலங்கை ஒரு பாதுகாப்பான இடமாக இருப்பதற்கு நீண்ட மற்றும் குறுகிய கால சுற்றுலாப் பயணிகளுக்கு உத்தரவாதம் அளித்து பாதுகாப்பான சுற்றுலாவுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். சுற்றுலா, விளையாட்டு மற்றும் இராஜதந்திர வருகைகளில் 'பயோ செக்யூர் பப்பில்' உருவாக்கி மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம். தரையிறங்கியது முதல் புறப்படும் வரை உயிர்க்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதில் இலங்கை தனது திறன்களை நிரூபித்துள்ளது. இந்த அம்சத்தில், உட்கட்டமைப்பு, போக்குவரத்து, உணவு மற்றும் பானம் மற்றும் சுகாதார வசதிகளை சீரமைத்துள்ளோம்.

மேலும், இப்போது, MICE ஊடாக (கூட்டங்கள், ஊக்கத்தொகைகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள்) சுற்றுலாவை எளிதாக்குவதில் இலங்கையின் திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். உலகெங்கிலும் உள்ள சூழ்நிலையையும் கருத்தில் கொண்டு, இலங்கையின் ஒப்பீட்டளவில் பாதுகாப்பான நிலைமை இந்த சந்தைக்கு வரவிருக்கும் நேரத்தில் ஒரு ஊக்கத்தை அளிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், தொழில்துறை மற்றும் வணிக முன்னேற்றத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு மற்றும் சேவை வசதிகளை தொடர்ந்து கட்டியெழுப்ப இலங்கை உறுதியளித்துள்ளது, இது வெளி மற்றும் உள்ளக பொருளாதார பங்காளர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னரிவிப்பாகும். தொற்றுநோயால் இலங்கையின் முக்கிய அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமாகவில்லை, மேலும், தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஒருபோதும் அச்சுறுத்தலில் இல்லை.

தொற்றுநோயையும் மீறி பொருளாதார அபிவிருத்தியை தக்கவைக்க, கடுமையான சுகாதார வழிகாட்டுதலின் கீழ் பெருந்தோட்டம் மற்றும் விவசாயத் துறைகள் செயல்பட்டு சர்வதேச சந்தையில் இலங்கை அடையாளத்தைப் பாதுகாக்க இலங்கை உரிய கவனம் செலுத்தியுள்ளது. இது சம்பந்தமாக, தேயிலை மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற ஒத்த இலங்கை விவசாய பொருட்களுக்கு இலங்கை சிறப்பு கவனம் செலுத்துகிறது. இலங்கை இந்து சமுத்திரத்தில் மத்தியில் அமைந்துள்ள நாடாக இருப்பதால் கடல் போக்குவரத்து, பின் ஏற்றுதல் நடவடிக்கைகள் மற்றும் மீள் ஏற்றுமதிகள் ஆகியவற்றிக்கு பெறுமதிமிக்கது.

மேலும், உலகளாவிய நட்பு வெளிநாடுகளின் எதிர்பார்ப்புகளையும், இலங்கை முக்கிய பங்கு வகிக்கும் பொருட்கள் மற்றும் பொருட்களின் தடையில்லா கடல் போக்குவரத்தை வழங்குவதன் அவசியத்தையும் நாங்கள் மதிக்கிறோம். கொவிட்19 க்கு எதிரான போரின் தொடக்கத்திலிருந்து இந்த அம்சங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. அனைத்து பொருளாதார பங்குதாரர்களின் மதிப்புமிக்க உள்ளீடுகளுடன், தொற்றுநோய்களுக்கு மத்தியில் துறைமுகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வந்தன. அதன்படி, துறைமுகங்களில் உள்ள ஊழியர்களின் சுகாதார பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன, இப்போதும் துறைமுக நடவடிக்கைகளை நாங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம்.

முன்னோக்கி மூலோபாயம் பற்றி பேசுகையில் இரண்டு அம்சங்களை முன்வைக்க விரும்புகிறேன். முதலாவதாக, இந்த தொற்று சூழ்நிலையில் இலங்கையை சிறப்புறச் செய்வது எது? இரண்டு தொற்றுநோய்க்குப் பிந்திய காலகட்டம் நமக்கு முன்னால் நிற்கின்றது.

நான் முன்பு கூறியது போல முதலில் இலங்கை உலக வரைபடத்தில் ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட மற்றும் முக்கியமான கேந்திர நிலையத்தில் அமைந்துள்ளது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்., இது இந்து சமுத்திரத்தில் மத்தியில் அமைந்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இரண்டாவது கொவிட் 19 தொற்றுநோயால் முழு உலகமும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் கொவிட் 19 தொற்றுநோயிலிருந்து ஒரு படிப்பினை எடுத்துக் கொண்டு, புதிய பொருளாதார, வணிக, தொழில்துறை மற்றும் சேவை பங்காளர்களுக்கு அவர்களின் பொருளாதாரத்தின் பின்னடைவிலிருந்து மீள்வதற்கு உறுதி வழங்க வேண்டும். 

இலங்கையின் அமைவிடம் குறித்து மிகைப்படுத்தினால் இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள பங்காளிகளுக்கு பரஸ்பர நன்மைகளைப் பெறக்கூடிய வாய்ப்புகளை அடையாள காண முடியும் என  நான் நம்புகிறேன், இலங்கை தனித்துவமானது மற்றும் இன்றைய நிலவரப்படி பொருளாதார பங்காளர்களுக்கு வாய்ப்பான நிலம். ஆகவே, உலகெங்கிலும் உள்ள வணிக பங்காளர்களுடன் பயனளிக்கும் மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவுகளை உருவாக்குவதே எமது எதிர்கால தேவை என்று ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

நான் முன்பு கூறியது போல், இலங்கை வாய்ப்புகள் நிறைந்த நாடு என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன், மேலும் மேம்பட்ட இணைப்பு, நம்பகமான ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நன்மைகளை பெற்றுக்கொள்ள  பொருளாதார பங்காளர் ஆகியவற்றிற்காக இந்த மன்றத்தை அழைக்க விரும்புகிறேன்.

கடைசியாக, முடிவல்ல பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன், இன்று எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள என்னை அழைத்ததற்கு. எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21