(எம்.மனோசித்ரா)
நாட்டில் கடந்த மூன்று தினங்களாக நாளாந்தம் 40 இற்கும் அதிகமான கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்படுகின்றன.
அதற்கமைய நேற்று திங்கட்கிழமை மேலும் 47 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டன.
இம்மரணங்கள் மே மாதம் 17 ஆம் திகதி முதல் இம்மாதம் 6 ஆம் திகதி வரை பதிவானவையாகும்.
எல்பிட்டிய, வத்துகஹமுல்ல, தங்கொட்டுவ, மாரவில, வலப்பனை, தெடிகம, வத்தளை, மாத்தறை, ஹட்டன், கலகெதர, வெல்லம்பிட்டி, ஊரகஹ, ஹொரணை, கோனபொல வடக்கு, பரகஸ்தொட்ட, கோனபொல, தெஹிவளை, கொழும்பு 9, தலவாக்கலை, நுவரெலியா, திருகோணமலை, அலவ்வ, நீர்கொழும்பு, காலி, களுத்துறை, தர்கா நகர், அங்கொடை, நாத்தாண்டியா, வலஹப்பிட்டி, ஹபருகல, மொரந்துட்டுவ, மாஹோ, பொல்கஹாவெல, இப்பாகமுவ, கண்டி, புலத்சிங்கள, அக்குரணை, தெஹியத்தகண்டி, பூகொடை, தொம்பே மற்றும் வேயங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 26 ஆண்களும் , 21 பெண்களும் உள்ளடங்குகின்றனர். குறித்த 47 மரணங்களில் 9 மரணங்கள் வீட்டிலேயே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதற்கமைய நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 1789 ஆகும்.
இதேவேளை இன்று செவ்வாய்கிழமை 2,637 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
அதற்கமைய இதுவரையில் நாட்டில் 210, 616 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 176 045 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 32 268 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM