இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ரஷ்ய கூட்டமைப்பின் தூதுவர் மேதகு யூரி பி. மேட்டரி, கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும், பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வாவை நேற்று (07.06.2021) ஸ்ரீ ஜெயவர்தனபுரயில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் கொவிட் -19 தொற்று நோயினை ஒழிப்பதுக்கு படையினரின் ஈடுபாட்டின் முக்கியத்துவத்திற்கும் தூதுவர் பாராட்டியதோடு நாட்டில் நோய் தொற்று பரவுவதற்கு எதிராக அனைத்து பங்குதாரர்களின் பங்களிப்பையும் பாராட்டினார்.
உலகின் தற்போதைய நோய் தொற்றை ஒழிப்பதற்கான முன்னேற்றங்களையும் அவர் அவதானித்தார். மேலும் அதன் பரவலின் அளவு, தொற்று வீதம் மற்றும் ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பாக விவாதித்தனர். அதற்கமைய ஜெனரல் ஷவேந்திர சில்வாவினால் கொவிட் -19 தொற்றின் நிலைமை, தடுப்பூசி, தனிமைப்படுத்தல் மையங்களின் நிலமைகள், பயணக் கட்டுப்பாடுகள், கொவிட் நோய் தொற்றை கண்டறிதல் தொடர்பான விவரங்களையும் ஜனாதிபதி மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சவாலை நோக்கி செல்லும் மூலோபாய மற்றும் குறிப்பிட்ட அணுகுமுறையை விளக்கினார்.
மேலும், இடை நிலை பராமரிப்பு மையங்கள் மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களின் நடவடிக்கைகள் மற்றும் நாடு முழுவதும் மேற் கொள்ளப்பட்டுவரும் தடுப்பூசி திட்டங்கள் தொடர்பாகவும் அவர் விளக்கமளித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM