எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி புளூ ஓர்ஜின் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் விண்வெளிக்கு பறக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த 55 வயதான ஜெப் பெசோஸ் கடந்த 1994 ஆம் ஆண்டில், அமசோன் என்ற, ஓன்லைன்' வர்த்தக நிறுவனத்தை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தி , உலக பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடித்தார்.
இவர் சிறுவயதில் விண்வெளிப் பயணம் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 2000 ஆம் ஆண்டு “ப்ளு ஓர்ஜின்” என்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் ஆரம்பித்தார்.
2015 ஆம் ஆண்டு ப்ளூ ஓர்ஜின் நிறுவனம் நியூ ஷெப்பர்ட் என்ற ரொக்கெட்டை வெற்றிக்கரமாக விண்வெளிக்குச் செலுத்தியது.
இது எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி விண்ணுக்கு பறக்க உள்ளதாகவும் இதில் புளூ ஓர்ஜின் நிறுவன தலைவர் ஜெப் பெசோஸ் ரொ க்கெட் மூலம், விண்வெளிக்கு பறக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடகங்களில் ஜெப் பெசோஸ் கூறுகையில்,
ப்ளு ஓர்ஜின் நிறுவனம் 2017 ஆம் ஆண்டு சோதனைக்காக மனிதர்களை ரொக்கெட்டில் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இதையடுத்து எதிர்வரும் ஜூலை மாதம் 20 ஆம் திகதி , எனது சகோதரர் மார்க்குடன் விண்வெளிக்கு பறக்க உள்ளேன்.
எங்களுடன் மேலும் ஒருவர்பயணிக்கலாம், அந்த இருகைக்கான ஏலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விண்வெளிக்கு பயணிக்க வேண்டும் என்ற எனது சிறுவயது கனவு நிறைவேறப்போகிறது என்றார்.
இந்த ஏலம் எதிர்வரும் 12 ஆம் திகதி நிறைவு பெறுகின்றது. இதில் மூன்றாவது இருக்கைக்கான ஏலம் தொடங்கியதுமே 143 நாடுகளில் இருந்து 6000 கும் மேற்பட்டோர் ஏலம் கேட்டனர்.
அதில் அதிக பட்சமாக ஒருவர் 2.8 மில்லியன் டொலர் அதாவது இலங்கை மதிப்பில் சுமார் 55 கோடியே 30 இலட்சம் ரூபா வரை ஏலம் கோரியதாக தெரியவந்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM