குடந்தையான்
தமிழக முதல்வராக பதவியேற்ற மு.க.ஸ்டாலின், இன்றுடன் ஒருமாத காலத்தை பூர்த்தி செய்திருக்கின்றார். அவர் தற்போது உருமாறிய கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக தளர்வுளற்ற ஊரடங்கை அமுல்படுத்திய விதத்தில் பல்வேறு எதிர்மறையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது அமுல்படுத்தப்பட்ட தளர்வுகளற்ற ஊரடங்கு குறித்து விமர்சனம் செய்த ஸ்டாலின், அதே தவறை செய்துள்ளதாக அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பதவியேற்ற குறுகிய காலத்திற்குள் ஊரடங்கு விடயத்தால் எதிர்பாராத நெருக்கடிகளுக்கும், அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து, அதனை சமாளிக்கத் தெரியாது அவர் திணற ஆரம்பித்திருக்கின்றார்.
அத்துடன் கொரோனாத் தொற்று நோயாளிகளுக்குத் தேவையான ரெம்டெசிவர் மருந்து தட்டுப்பாடு, ஓட்சிசன் பற்றாக்குறை, தடுப்பூசி ஒதுக்கீடு போதாமை, கறுப்பு பூஞ்சைத் தொற்று, அதற்கான மருந்துத் தட்டுப்பாடு உள்ளிட்ட பல விடயங்களில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் இடையே பாரபட்சமான நிலைமை நீடித்து வருகிறது. இந்த விடயத்தினை சாதூரியமாக எப்படி கையாள்வது என்பது குறித்து தெளிவான பார்வை இல்லாமையால் ஸ்டாலின் தவித்து வருகிறார்.
இவ்வாறான நிலையில், தமிழக அரசின் தொழில்துறை, நிர்வாகத்துறை மற்றும் மருத்துவத்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் ஒவ்வொருவரும், முதல்வர் ஸ்டாலினிடம் நற்பெயர் எடுக்க வேண்டும் என்ற காரணத்தினால் முரண்பட்ட விதிமுறைகளை பரிந்துரை செய்து, அதனை நடைமுறைப் படுத்துவதால் தான் நெருக்கடிகள் மேலும் அதிகரிக்கின்றன.
ஆனால் முதல்வரின் ஆதரவாளர்களோ அல்லது அவருடன் இருக்கும் அமைச்சர்களோ, ‘முதல்வர்எல்லோரின் எதிர்பார்ப்புகளையும் மீறி சாதூரியமாக செயல்பட்டு சாதனை படைத்து வருகிறார் என்றே பகிரங்கமாக தெரிவித்து வருகின்றார்கள்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-06-06#page-17
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM