வேனில் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட ஐவர் கைது

Published By: J.G.Stephan

06 Jun, 2021 | 03:26 PM
image

(செ.தேன்மொழி)
சியம்பலாண்டுவ பகுதியில் வேனில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது பொத்துவில் பகுதியைச் சேர்ந்த நபர்களே வேனில் பயணித்துள்ளதுடன், குறித்த வேனிலிருந்து 151 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் வேனின் சாரதி மற்றும் அதில் பயணித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்களுள் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47