(செ.தேன்மொழி)
சியம்பலாண்டுவ பகுதியில் வேனில் ஹெரோயின் போதைப் பொருளை கடத்தியமை தொடர்பில் பெண்ணொருவர் உட்பட ஐந்து பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே, சந்தேகத்திற்கிடமான வேன் ஒன்று சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதன்போது பொத்துவில் பகுதியைச் சேர்ந்த நபர்களே வேனில் பயணித்துள்ளதுடன், குறித்த வேனிலிருந்து 151 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது தொடர்பில் வேனின் சாரதி மற்றும் அதில் பயணித்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நபர்களுள் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
மேற்படி சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM