அத்தியாவசிய சேவைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் முக்கிய  தீர்மானம் - சுசில்

Published By: Digital Desk 4

04 Jun, 2021 | 08:32 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜூன் மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து  கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் மீள ஆரம்பிக்க  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை முழுமையாக இல்லாதொழிக்க முடியாது. 

Articles Tagged Under: சுசில் பிரேமஜயந்த | Virakesari.lk

ஒரு தரப்பினரது   பொறுப்பற்ற  செயற்பாடுகளினால் தற்போதைய நெருக்கடி நிலை தோற்றம் பெற்றுள்ளது என  தொலைநோக்கு  கல்வி  மேம்பாடு  இராஜாங்க அமைச்சர்  சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் தற்போது  அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை தொடர்பில்   வீரகேசரி - செய்திப்பிரிவு வினவிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

 அவர் மேலும் குறிப்பிடுகையில்,

 பொது மக்களின் வாழ்வாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் கொவிட்-19 வைரஸை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளை  முன்னெடுக்குமாறு ஜனாதிபதி உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இதற்கமைய இம்மாதத்தின் இறுதி வாரத்தில் இருந்து அனைத்து அத்தியாவசிய சேவைகளையும் கடுமையான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமைய மீள ஆரம்பிக்க தீர்மானிககப்பட்டுள்ளது.

பொது போக்குவரத்து சேவையினை மீள ஆரம்பிக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் புதிதாக வகுக்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது. இதற்கமைய  பொது போக்குவரத்து சேவை குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தற்போது நாடு தழுவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சிலர் தற்போதும் பொறுப்பற்ற  வகையில் செயற்படுவதை அவதானிக்க முடிகிறது. ஒரு தரப்பினரது  பொறுப்பற்ற செயற்பாடுகள்  அனைத்து தரப்பினருக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பொருளாதாரத்திற்கு  பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டங்களை செயற்படுத்துவது அவசியமாகும். தற்போதைய நெருக்கடியான நிலையில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் கொவிட் வைரஸ் ஒழிப்புக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை தோற்றம் பெறும்.  

சுகாதாரம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றை சமமான முறையில் மகாமைத்துவம் செய்ய அரசாங்கம் அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது. ஆகவே அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு  நாட்டு மக்கள் முழுமையான ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58