மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கூளாவடி பிரதேசத்தினை இராணுவத்தினர் இன்று வெள்ளிக்கிழமை (05) சுற்றிவளைத்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில், கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் கைது செய்துள்ளனர்.
அத்துடன் 200 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களை மீட்டு தம்மிடம் ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தை இன்று காலை 7 மணியில் இருந்து பகல் 12 மணிவரை இராணுவத்தினர் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்தனர்.
இந்த தேடுதல் நடவடிக்கையின் போது கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை கண்டுபிடித்தனர். இதில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்ததுடன் அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி ஒன்றும் 4 கேன்களில் 200 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்களையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் உட்பட மீட்கப்பட்ட உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கி கசிப்பு உற்பத்திக்கான உபகரணங்கள், 200 லீற்றர் கோடா என்பவற்றுடன் இராணுவத்தினர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM