எம்.எம்.சில்வெஸ்டர்
திறமை அடிப்படையில் சம்பளத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ள திட்டத்துக்கு அமைவாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கான வருடாந்த ஒப்பந்தத்தில் குறித்த 24 கிரிக்கெட் வீரர்களும் இதுவரை கைச்சாத்திடவில்லை என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவிக்கிறது.
குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இறுதித் தினமாக ஜூன் மாதம் 3 ஆம் திகதியை ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
எனினும், தொடர்ச்சியாக வீரர்களுக்கான புதிய ஒப்பந்தத்தில் ஒழுங்கமைப்பு மற்றும் வீரர்களை வகைப்படுத்தியுள்ளமை தொடர்பில் ஒவ்வொரு வீரர்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள புள்ளி முறைமையை வெளிப்படுத்துமாறு கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டிருந்தபோதிலும், அதனை வெளிப்படுத்தாது தவிர்த்து வருவதாக குறித்த 24 வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஆகவே, இது தொடர்பில் சரியான தகவல்கள் கிடைக்கும் வரையில் குறித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதில்லை என குறித்த 24 கிரிக்கெட் வீரர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணியான நிஷான் சிட்னி பிரேமரத்ன அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM