மேலும் 2 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையும் - இராணுவத்தளபதி

Published By: Gayathri

03 Jun, 2021 | 06:42 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் இதுவரையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாத 12 மாவட்டங்களில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்த இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா, எதிர்வரும் 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் 2 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடையவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இதுவரையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படாத 12 மாவட்டங்களில் எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். 

இதன்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும், பாதிப்புக்களுக்கு உள்ளாகக்கூடிய கர்பிணிகளுக்கும், அரச உத்தியோகத்தர்களுக்கும் முன்னுரிமையளிக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இது தவிர எதிர்வரும் 8 ஆம் திகதியிலிருந்து இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் சைனோபார்ம் தடுப்பூசி முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் ஏற்கனவே முதற்கட்ட தடுப்பூசி வழங்கப்பட்ட அதே இடங்களில் இரண்டாம் கட்ட தடுப்பூசியும் வழங்கப்படும்.

நாளை மறுதினம் ஞாயிறுக்கிழமை (6) ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளும், 9 ஆம் திகதி மேலும் ஒரு மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகளும் நாட்டை வந்தடையவுள்ளன. 

இதுவரையில் 11 இலட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இவ்வாறு எதிர்வரும் காலங்களில் கிடைக்கப் பெறும் தடுப்பூசிகளின் அளவிற்கமைய ஏனைய மாவட்டங்களிலும் அவற்றை வழங்கும் பணிகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13