எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தை தொடர்ந்து சுற்றுச் சூழல் அமைப்பினுள் நுழைந்த 584 மெட்ரிக் தொன் பிளாஸ்டிக் கழிவுகளை நேற்று வரை கடற்கரைகளிலிருந்து அதிகாரிகள் அகற்றியுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
பிளாஸ்டிக் மற்றும் பொலத்தீன் வகைகள் தயாரிக்கப் பயன்படும் பிளாஸ்டிக் கூழாங்கற்கள் உள்ளிட்ட சேகரிக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் தீ விபத்தைத் தொடர்ந்து அனைத்து கடற்கரைகளையும் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கையை இலங்கை கடற்படை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.
இதேவேளை கப்பலினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் பாதிப்பை கவனத்திற் கொண்டு கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று உத்தரவு பிறப்பித்தார். தொழில்நுட்ப காரணங்களை அடிப்படையாகக் கொண்டு, சட்டமா அதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம், சமுத்திர பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவருக்கு உள்ள அதிகாரங்களை பயன்படுத்தி, கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM