கொரோனா வைரஸ் தொற்றை ஒழித்துக்கட்டுவதில் தடுப்பூசிகளுக்கு மிக முக்கியமான பங்கு உள்ளது.
அமெரிக்காவில் உள்ள ராக்கெல்லர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கொரோனா நோயாளிகளின் இரத்தத்தில் உள்ள நோய் எதிர்ப்பு பொருளை (ஆன்டிபாடிஸ்) ஆய்வு செய்து, மூலக்கூறுகளின் பரிணாமத்தை கண்காணித்தனர்.
இந்த ஆய்வில் கடந்த ஆண்டின் வசந்த காலத்தில் கொரோனா பாதிப்புக்குள்ளான 63 பேர் பயன்படுத்தப்பட்டனர்.
அவர்களை கண்காணித்து வந்ததில், நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மெமரி, ‘பி’ செல்களால் உற்பத்தி செய்யப்படும் நோய் எதிர்ப்பு பொருள், கொரோனா தொற்றை ஏற்படுத்தும் சார்ஸ் கொவ்-2 வைரசை வீழ்த்துவதில் சிறப்பாக பணியாற்றுவது தெரிய வந்துள்ளது.
மெமரி பி செல்கள், நோய் எதிர்ப்பு தேக்கம் போல செயல்படுகின்றன. இது நோய் எதிர்ப்பு பொருளின் மாறுபட்ட தொகுப்பைக் கொண்டுள்ளது.
இந்த ஆய்வில், பயன்படுத்தப்பட்டுள்ள மக்கள் கொரோனா வைரசுக்கு எதிராக மேம்பட்ட நீண்ட கால பாதுகாப்பை வளர்த்துக்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
மொடர்னா அல்லது பைசர் தடுப்பூசியின் ஒரு டோஸ்-ஐ போட்டுக்கொண்ட நபர்களிடையே இந்த நோய் எதிர்ப்பு பொருள் இயல்பாக மேலும் அதிகரித்து இருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இவர்களின் உடல்களில் உருவான நோய் எதிர்ப்பு பொருள், உருமாறிய கொரோனாவுக்கு எதிராக வலுவாக விளங்குகின்றன.
குறிப்பாக இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காக, அமெரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படுகின்றன என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய தடுப்பூசிகளுடன் பூஸ்டர் சேர்கிறபோது, அது ஒரு போதும் கொரோனா தொற்றுநோயைப் பெறாதவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பை அளிக்கக்கூடும் என்றும் இந்த ஆய்வு காட்டுகிறது.
(தினத்தந்தி)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM