(க. பிரசன்னா)
உலக சுகாதார ஸ்தாபனத்தின் கணிப்பீட்டின்படி, புகை பிடிப்போருக்கு கொவிட் - 19 தொற்று ஏற்படும் அபாயமும் மற்றும் மரணிக்கும் அபாயமும் அதிகம் காணப்படுவதாக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
‘புகைப்பதை நிறுத்துவதற்காக அர்ப்பணிப்போம்’ என்ற தொனிப்பொருளில் புகைப்பொருள் தடுப்பு தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இணையவழி ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.
புகைப்பொருளானது, பாவனையாளர்களில் இருவரில் ஒருவரின் மரணத்திற்கு காரணியாக அமைவதுடன் ஒரு நாளைக்கு சராசரியாக 55 இலங்கையர்கள் உட்பட வருடாந்தம் உலகளாவிய ரீதியில்; 8 மில்லியன் மக்களை அகால மரணத்துக்கு உள்ளாக்குகின்றது.
புகையிலை பாவனையானது, இருதய நோய், புற்று நோய், சுவாச நோய் மற்றும் நீரிழிவு ஆகிய தொற்றா நோய்கள் ஏற்படுவதற்கு பிரதான காரணியாக அமைகிறது.
மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இவ்வருட ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆய்வுகளிற்கு ஏற்ப, புகை பிடிப்போருக்கு கொவிட் - 19 ஏற்படும் அபாயமும் மற்றும் மரணிக்கும் அபாயமும் அதிகம் என்பதை சுட்டிக்காட்டியிருந்தது.
குறிப்பாக புகைப்பவர்கள், அடிக்கடி உதடுகளின் மீது கைகளை வைப்பதனால் கொரோனா வைரஸ் உடலினுள் செல்வதற்கான சந்தர்ப்பம் அதிகம்.
புகைப்பிடிப்போருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவடைவதனால், அவர்களுக்கு கொவிட் தொற்றும் சந்தர்ப்பம் அதிகமாகும்.
மேலும் கொரோனா வைரஸ் அவர்களின் உடலிற்குள் செல்லுமிடத்து, நுரையீரலின் செயற்பாடு பலவீனமடைவதுடன், அவர்களுடைய நோய் நிலைமை தீவிரமடைந்து மரணம் சம்பவிப்பதற்கான அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன.
கடந்த 2016 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்;டு நிதியம் ஆகியன இணைந்து இலங்கையில் நடாத்திய கணக்கெடுப்பின் படி புகைத்தல் காரணமாக ஏற்பட்ட மரணங்கள், நோய்கள் மற்றும் வேறு தாக்கங்கங்களினால் இலங்கை பொருளாதாரத்திற்கு ரூபாய் 214 பில்லியன்கள் நட்டம் ஏற்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த ஆண்டில் புகையிலை நிறுவனத்திடமிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு கிடைக்கப்பெற்ற வரி வருமானம் ரூபாய் 92.9 பில்லியன் மாத்திரமே ஆகும்.
எனவே புகைப்பிடிப்போர் தமது பாவனையை நிறுத்த வேண்டியதும், அந்நிலைமையை தக்க வைத்துக்கொள்ள வேண்டியதும் தற்காலத்தில் அவசியமாகுமெனவும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM