குடந்தையான்
தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விடயத்தில்ஊரடங்கு தான் ஒரே தீர்வு என்பதும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அ.தி.மு.க.வின் அணுகுமுறைக்கும்,தி.மு.க.வின் அணுகுமுறைக்கும் வேறுபாடு இருப்பதும் அப்பட்டமாக வெளிப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மக்கள் சுயமாக விழிப்புணர்வுபெற்று, அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஸ்டாலினின் நடவடிக்கைகள் மற்றும்தி.மு.க. அரசின் செயல்பாடுகள் இருப்பதும் பகிரங்கமாகியுள்ளது.
கொரோனா தடுப்பு விடயத்தில் தி.மு.க. அரசியலைக் கடந்துஅ.தி.மு.க.வுடன் கரம் கோர்த்து செயல்படுவது ஆச்சரியமளிக்கும் அதே தருணத்தில் ஆளும்கட்சியாக இருந்த அ.தி.மு.க., கொரோனாத் தொடர்பாக தி.மு.க.அரசு எடுக்கும் நடவடிக்கை மனதளவில்முழுமையாக ஒத்துழைப்பை வழங்கவில்லை. ஆனால் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மௌனமாகபார்வையிட்டு வருகிறது.
கொரோனா அரசியலில் தி.மு.க. சாதுரியமாக செயல்படுவதையும்,அ.தி.மு.க. மௌனமாக இருப்பதையும் பார்த்த மத்திய பா.ஜ.க., தி.மு.க. தலைமையிலான தமிழகஅரசுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்க திட்டமிட்டிருக்கிறது. இதன் காரணமாகத் தான் கொரோனாதொற்று பரவலைக்கட்டுப்படுத்தும் விடயத்தில் மு.க.ஸ்டாலின் முன்வைத்த கோரிக்கைகளை ஏற்றுபா.ஜ.க. உதவிகளைச் செய்து வருகிறது. இதன் பின்னணியிலும் பா.ஜ.க. திரை மறைவு அரசியல்நோக்கத்தினைக் கொண்டிருப்பதாகவே கூறப்படுகின்றது.
கொரோனா விவகாரத்தில் சர்வதேச ஊடகங்கள் நரேந்திரமோடியை‘நிர்வாக திறனற்றவர்’ என்ற கோணத்தில் விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறன. இதனை திசைமாற்றம்செய்யவேண்டும் என்றால் அரசியல் ரீதியாக மாறுபட்ட கொள்கைக் கொண்டவர்களுடன் இணக்கமானபோக்கை கடைபிடித்தால், அவை மாற்றம் பெறும் என்ற நம்பிக்கையில் மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசு , தி.மு.க.வின் கோரிக்கைகளை ஏற்று செயற்படுத்த முனைந்திருக்கின்றது.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-05-30#page-17
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM