சிவலிங்கம் சிவகுமாரன்
கொழும்பு துறைமுக நகர விசேடபொருளாதார ஆணைக்குழு சட்டம் கடந்த 27 ஆம் திகதியிலிருந்து செல்லுபடியாகும் வண்ணம் அதில்சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார். மேற்படி சட்டமூலமானது சில திருத்தங்களுடன் கடந்த20 ஆம் திகதி பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை முக்கிய விடயம். சட்டமூலம் மீதான மூன்றாம்வாசிப்பின் போது அதற்கு ஆதரவாக 149 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் கிடைத்தன.91 மேலதிக வாக்குகளால் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னதாக இச்சட்டமூலமானதுஇலங்கையை சீனாவுக்கு அடகு வைக்கும் செயலென்றும் எமது நாடு அந்நியரிடம் பறிபோகப்போகின்றது என்றும் எழுந்த ஆரவாரங்கள்மற்றும் தேசப்பற்றாளர்களின் சத்தங்கள் எல்லாம் இறுதி நேரத்தில் அடங்கிப்போய் விட்டன.
தேசப்பற்றாளர்களே அமைதியாகிவிட்டபோது தற்போது மொழிப்பற்றாளர்கள் இந்த கொழும்பு துறைமுக விவகராத்தை தமது அரசியலுக்குபயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். கொரோனா காலத்தில் வேறு என்ன தான் செய்வது? தேவையானநேரங்களிலெல்லாம் தமிழ் மொழிக்கு நடந்த அக்கிரமங்கள் உரிமை மீறல்கள் பற்றி அமைதி காத்துவிட்டு இப்போது பொங்கியெழுந்துள்ளனர் இந்த மொழிப்பற்றாளர்கள்.
இந்நாட்டின் தேசப்பற்றாளர்களாக எப்போதும் இருக்கக் கூடியவர்கள்பெளத்த சிங்களவர்கள் மட்டுமே. சிறுபான்மையினர் என்ன தான் தமது உயிரை கொடுத்து நான்இந்த நாட்டின் குடிமகன் என்று கூறினாலும் அவர்கள் இரண்டாம் தர பிரஜைகளாகவே பார்க்கப்படுவர்.அது வரலாற்றுச் சோகம். ஆகவே கொழும்பு துறைமுக நகர் சர்ச்சையில் பெளத்த சிங்கள தேசப்பற்றாளர்களேஇறுதியில் மெளனித்து விட்ட நிலையில் சிறுபான்மை கட்சித் தலைவர்களுக்கு இவ்விடயத்தில்பேசுபொருளாகக் கிடைத்த விடயமே தமிழ் மொழி புறக்கணிப்பு.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-05-30#page-16
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM