சுபத்ரா
ஐ.நா. பொதுச்சபையில் இலங்கைக்கு மற்றொரு பலப்பரீட்சை உருவாகியிருக்கிறது. சர்வதேச சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் தேர்தலில், இலங்கையும் களமிறங்கியுள்ளது.
34 உறுப்பினர்களைக் கொண்ட சர்வதேச சட்ட ஆணைக்குழு ஐந்து ஆண்டு பதவிக்காலத்தைக் கொண்டது. தற்போதுள்ள ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பதவிக்காலம், 2022 டிசம்பருடன் முடிவுக்கு வரவுள்ளது.
இதனால், புதிதாக 34 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நவம்பர் மாதம், நடக்கவுள்ள ஐ.நா. பொதுச்சபையின் 76 ஆவது கூட்டத்தொடரில், இடம்பெறவுள்ளது.
உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் நாடுகள், வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் ஜூன் முதலாம் திகதியாகும்.
பெரும்பாலான நாடுகள் ஏற்கனவே தமது வேட்பாளர்களின் பெயர்களை ஐ.நா. பொதுச்செயலருக்குப் பரிந்துரை செய்துள்ளன. இலங்கை அரசாங்கம், ஐ.நா.வுக்கான நிரந்தரப் பிரதிநிதியான முன்னாள் நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயரை முன்மொழிந்திருக்கிறது.
இந்தப் பரிந்துரைக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மத்தியில் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளதுடன், அவருக்கு எதிரான பிரசாரங்களையும் தொடங்கியுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் சட்டமா அதிபராக இருந்த மொஹான் பீரிஸ், நேரடியாகவே பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டவர்.
பிரதம நீதியரசராக இருந்த ஷிராணி பண்டாரநாயக்க சர்ச்சைக்குரிய வகையில், பதவி நீக்கம் செய்யப்பட்டு, அந்த இடத்துக்கு மொஹான் பீரிஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த கட்டுரையை மேலும் வாசிக்க https://epaper.virakesari.lk/newspaper/Weekly/weekly-main/2021-05-30#page-12
இதைத் தவிர மேலும் செய்திகள் மற்றும் கட்டுரைகளை வாசிக்க https://bookshelf.encl.lk/.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM