(லியோ நிரோஷ தர்ஷன்)
இந்தியாவிற்குறிய நாட்டாட்சி எல்லையை லடாக்கில் சீனாவிடம் இழந்தோம். தற்போது நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுமே சீன முகாம்களாகியுள்ளன.
இந்திய வரலாற்றில் வலிமையான பிரதமரின் கீழ் இவை அனைத்தும் நடந்துள்ளதாக முன்னாள் நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை மக்கள் செல்வாக்குடனான வலிமையான பிரதமராக நரேந்திர மோடி உள்ளார். ஆனால் இந்த காலப்பகுதயில் இந்திய - சீன எல்லைகளில் பல்வேறு முறுகல் நிலை ஏற்பட்டது.
குறிப்பாக லடாக்கில் எமது எல்லையை இழக்கும் நிலை ஏற்பட்டது. மறுப்புறம் இந்தியாவின் எல்லையை பகிர்ந்துக்கொண்டுள்ள நேபாளம் போன்ற நாடுகள் மற்றும் இலங்கை போன்ற அண்டைய நாடுகளில் சீனா மிக வேகமாக காலூன்றிவருகின்றது.
அதிலும் இலங்கை - நேபாளம் சீனாவின் முகாம்களாகவே உள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் சீனா மேற்கொண்டு வரும் பல திட்டங்கள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு விடயத்திற்கு அச்சுறுத்தலாக அமைவதாக டெல்லி பல முறை கொழும்பிற்பு அறிவித்தது.
குறிப்பாக வடக்கு தீவுகளில் முன்னெடுக்கப்பட உள்ள மின் திட்டம் போன்றவை முக்கியமானவையாகும்.
மறுப்புறம் துறைமுக நகர் குறித்தும் டெல்லி மிகவும் கூர்மையாக அவதானிக்கப்படுவதாக கூறப்படுகின்ற நிலையில் முன்னாள் நிதி மற்றும் வெளியுறவு அமைச்சர் யஷ்வந்த் சின்ஹ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM