(எம்.எப்.எம்.பஸீர்)
எக்ஸ்பிரஸ் பேர்ள் சரக்குக் கப்பலில் பரவிய தீ தொடர்பில் சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜய் ராஜரட்ணம், நேற்று அதிகாரிகளுடன் விஷேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுத்தார். சட்ட மா அதிபர் திணைக்களத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
கடற்படை தளபதி, சட்ட மா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் கடற்சார் விடயங்கள் தொடர்பிலான விவகாரங்களை மேற்பார்வை செய்யும் சிரேஷ்ட மேலதிக சொலிசிட்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றிருந்ததாக அறிய முடிகின்றது.
இதன்போது கப்பல் தீ காரணமாக இலங்கையின் கடற்பரப்பு மற்றும் சமுத்திர சூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பிலும், அது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள், நட்ட ஈடு பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இக்கலந்துரையாடலின் போது, 10 நாட்களுக்கும் மேலாக கப்பலின் நிலைமை தொடர்பில் மிக விரிவாக கேட்டறிந்துகொண்டுள்ள சட்ட மா அதிபர், சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளுக்கு உடனடி ஆலோசனைகள் பலவற்றையும் வழங்கியுள்ளதாக தெரிகிறது.
குறிப்பாக 2008 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க கடல் மாசு தடுப்பு சட்டத்தின் பிரகாரம் செயற்படுவது தொடர்பிலும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM