கொவிட்-19 வைரஸின் மிகவும் பரவக்கூடிய இந்திய மாறுபாட்டிற்கு எதிரான தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இலங்கை உள்ளிட்ட மூன்று நாடுகளுக்கு இத்தாலியின் பயணத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்தியா பங்களாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வரும் மக்களுக்கான நுழைவுத் தடையினை இத்தாலி ஞாயிற்றுக்கிழமை நீட்டித்தது.
இத்தாலிய குடிமக்களுக்கு பொருந்தாத இந்த தடை 2020 ஏப்ரல் பிற்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அது ஞாயிற்றுக்கிழமை காலாவதியாக இருந்தது.
இந் நிலையில் அந்த தடை உத்தரவினை எதிர்வரும் ஜூன் 21 ஆம் திகதி வரை நீட்டிப்பதாக இத்தாலிய சுகாதார அமைச்சர் ராபர்டோ ஸ்பெரான்சா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் B.1.617 மாறுபாடு கடந்த ஆண்டு இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்டது மற்றும் சமீபத்திய வாரங்களில் தெற்காசிய நாடுகளைத் தாக்கிய பேரழிவு தரும் கொவிட் -19 அலைக்கு காரணம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வாரம், உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த மாறுபாடு அதிகாரப்பூர்வமாக 53 நாடுகளுக்கு பரவியுள்ளது என்றும், மேலும் ஏழு நாடுகளிலும் அதிகாரப்பூர்வமற்ற ஆதாரங்களுடன் இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM