'கொரோனாவை முழுமையாக இல்லாதொழிக்க மக்களின் ஒத்துழைப்பு அவசியம்': யாழ். மக்களிடம் டக்ளஸ்

Published By: J.G.Stephan

30 May, 2021 | 03:36 PM
image

ஜனாதிபதியினால் யாழ். மாவட்டத்திற்கு முதற் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம்  இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.

கொரோனா பாதிப்பு அதிகமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில், குறித்த தடுப்பூசிகள்  பொது மக்களுக்காக வழங்கப்பட்ட நிலையில்,  அரியாலை பிறப்பன் குளம் மகா மாரிஅம்மன் ஆலய திருமண மண்டபத்திலும் அரியாலை பிரதேச மக்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில், அங்கு சென்ற அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நாமல் ராபக்ஷ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன் உட்பட்ட குழுவினர் தடுப்பூசி ஏற்றப்படும் செயற்பாடுகளை நேரடியாக அவதானித்ததுடன், பொது மக்களுடனும் கலந்துரையாடினர்.

இதன்போது கருத்து தெரிவித்திருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முழுமூச்சுடன் மேற்கொண்டு வருவதாகவும், பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கினால் விரைவில் மீள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், யாழ் மாவட்டத்திற்கு முதற் கட்டமாக தடுப்பூசிகளை வழங்கி வைத்துள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏனைய மாவட்டங்களுக்கும் அடுத்த கட்டங்களில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08