ஜனாதிபதியினால் யாழ். மாவட்டத்திற்கு முதற் கட்டமாக அனுப்பி வைக்கப்பட்ட 50 ஆயிரம் தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்ட நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கான கண்காணிப்பு விஜயத்தினை மேற்கொண்டார்.
கொரோனா பாதிப்பு அதிகமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில், குறித்த தடுப்பூசிகள் பொது மக்களுக்காக வழங்கப்பட்ட நிலையில், அரியாலை பிறப்பன் குளம் மகா மாரிஅம்மன் ஆலய திருமண மண்டபத்திலும் அரியாலை பிரதேச மக்களுக்கான தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், அங்கு சென்ற அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, நாமல் ராபக்ஷ மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் திருமதி சார்ள்ஸ், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான அங்கஜன் இராமநாதன் உட்பட்ட குழுவினர் தடுப்பூசி ஏற்றப்படும் செயற்பாடுகளை நேரடியாக அவதானித்ததுடன், பொது மக்களுடனும் கலந்துரையாடினர்.
இதன்போது கருத்து தெரிவித்திருந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டில் கொரோனா அச்சுறுத்தலை முழுமையாக அகற்றுவற்கான வேலைத் திட்டங்களை அரசாங்கம் முழுமூச்சுடன் மேற்கொண்டு வருவதாகவும், பொது மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு வழங்கினால் விரைவில் மீள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
மேலும், யாழ் மாவட்டத்திற்கு முதற் கட்டமாக தடுப்பூசிகளை வழங்கி வைத்துள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஏனைய மாவட்டங்களுக்கும் அடுத்த கட்டங்களில் தடுப்பூசிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM