'கேப்டிவ் போல்ட்' ரக ஆயு­தமே லசந்த கொலைக்கு உப­யோகம் : அறிக்கை கோரி­யது நீதி­மன்றம்

Published By: Robert

26 Aug, 2016 | 09:31 AM
image

சண்டே லீடர் பத்­தி­ரி­கையின் முன்னாள் ஆசி­ரியர் லசந்த விக்­ர­ம­துங்­கவை படு­கொலை செய்ய 'கேப்டிவ் போல்ட்' ரக துப்­பாக்கி பயன்­ப­டுத்­தப்­ பட்­டுள்­ளமை குறித்து விசா­ர­ணை­களில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள நிலையில், குறித்த ரக ஆயுத கொள்­வ­னவு, பயன்­பாடு உள்­ளிட்ட விடயங்­களை மையப்­ப­டுத்தி உடன் விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு கல்­கிஸை பிர­தான நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் இரா­ணுவ தள­ப­திக்கும் லங்கா லொஜஸ்டிக்ஸ் நிறு­வ­னத்­துக்கும் நேற்று உத்­த­ரவு பிறப்­பித்தார்.

லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்­றைய தினம் கல்­கிஸை பிர­தான நீதிவான் மொஹம்மட் சஹாப்தீன் முன்­னி­லையில் அவ­ரது உத்­தி­யோ­க­பூர்வ அறையில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது. இதன்­போதே புல­னாய்வுப் பிரிவின் கோரிக்­கையை ஏற்று அவர் இந்த உத்­த­ரவைப் பிறப்­பித்­துள்ளார். இதனை விட இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள் 41 பேரின் கடன்கள் தொடர்­பிலும் தக­வல்­களைப் பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறு இலங்கை கடன்கள் தொடர்­பி­லான தகவல் மையத்­துக்கு நீதிவான் உத்­த­ர­விட்டார்.

லசந்த விக்­ர­ம­துங்க படு­கொலை விவ­காரம் தொடர்­பி­லான வழக்கு விசா­ர­ணைகள் நேற்று மீளவும் பிர­தான நீதிவான் சஹாப்தீன் முன்­னி­லையில் விசா­ர­ணைக்கு வந்­தன. நேற்று இவ்­வ­ழக்கில் கொலையை நேரில் பார்த்­த­தாக கூறப்­படும் கண் கண்ட சாட்­சி­யான லால் வெலன்டைன் என்­பவர் சந்­தேக நபரை அடை­யாள அணி­வ­குப்பில் அடை­யளம் காட்ட இருந்த நிலையில், சாட்­சி­யாளர் தொடர்பில் கல்­கிசை மேல­திக நீதிவான் சுலோச்­சனா வீர­சிங்க கடந்த தவணை வழங்­கிய உத்­த­ர­வுக்கு அமைய அவரின் மன நிலை தொடர்­பி­லான சட்ட வைத்­திய அறிக்கை மன்­றுக்கு சமர்ப்­பிக்­கப்ப்ட்­டது.

விஷேட வைத்­திய நிபுணர் மஹி­பா­லவின் அறிக்­கையில் கண்­கண்ட சாட்­சி­யாக கரு­தப்­படும் லால் வெலன்டைன் சாட்­சி­ய­ம­ளிக்­கவோ, அவரை சாட்­சி­யாக பயன்­ப­டுத்­திக்­கொள்­ளவோ உரிய மன நிலையில் இல்லை என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதனால் அவர் சாட்­சி­யாளர் ஒரு­வ­ருக்­கு­ரிய தகு­தியில் இல்லை என அதில் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது.

இந்த அறிக்­கையை குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொலிஸ் பரி­சோ­தகர் சுதத்­துடன் மன்றில் ஆஜ­ரான சிறப்பு விசா­ரணை அதி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டி சில்வா நீதிவான் சஹாப்­தீ­னிடம் கைய­ளித்தார்.

இந்த அறிக்­கையைத் தொடர்ந்து நேற்­றைய தினம் லசந்த கொலை தொடர்பில் நடத்­தப்­ப­ட­வி­ருந்த அடை­யாள அணி­வ­குப்பு ரத்து செய்­யப்­பட்­டது.

இத­னை­ய­டுத்து, குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­காரி நிஸாந்த சில்வா, லசந்த கொலை தொடர்பில் மேல­திக விசா­ரணை அறிக்கை ஒன்­றினை மன்றில் சமர்ப்­பித்து சில உத்­த­ர­வு­க­ளைப்­பெற்­றுக்­கொன்டார்.

ஏற்­க­னவே நீதி­மன்ற உத்­த­ர­வுக்கு அமைய வங்­கிக்­க­ணக்கு விப­ரங்­களில் ஒரு பகு­தியே விசா­ர­ணை­யா­ளர்­க­ளுக்கு கிடைத்­துள்­ள­தா­கவும் தொலை­பேசி தக­வல்கள் அடங்­கிய அறிக்­கையும் கிடைக்க வேண்­டி­யி­ருப்­ப­தா­கவும் இரா­ணுவ புல­னாய்வுப் பிரிவின் ஆவ­ணங்கள் தொடர்­பிலும் அந்த நிலை­மையே நீடிப்­ப­தா­கவும் புல­னா­யவுப் பிரி­வினர் நீதி­வானின் கவ­னத்­துக்கு கொண்டு வந்­தனர்.

இந் நிலையில் இரா­ணுவ புல­னாய்­வா­ளர்கள் 41 பேர் பெற்­றுக்­கொண்ட கடன் விப­ரங்கள் தொடர்­பி­லான தக­வல்­களை தமக்கு பெற்­றுத்­த­ரு­மாறும் லசந்­தவைக் கொலை செய்ய பயன்­ப­டுத்­தி­ய­தாக நம்­பப்­படும் பிரத்­தி­யேக ஆயுதம் தொடர்­பிலும் தக­வல்­களைப் பெற்றுத் தர இரா­ணுவ தள­பதி மற்றும் ஆயுத கொள்­வ­னவு நிறு­வ­ன­மான லங்கா லொஜஸ்டிக்ஸ் ஆகி­வற்­றுக்கு உத்­த­ர­வி­டு­மாறும் புல­னாய்வுப் பிரி­வினர் கோரினர்.

இந் நிலை­யி­லேயே 41 புல­னாய்­வா­ளர்­களின் கடன் விப­ரங்­களைப் பெற்­றுக்­கொ­டுக்­கவும் லசந்­தவை கொலை செய்ய பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாக நம்­பப்­படும் மிருக வேட்­டைக்கு பொது­வாக பயன்­ப­டுத்­தப்­படும் கேப்டிவ் போல்ட் ரக ஆயுதம் குறித்து அதன் பயன்­பாடு, கொள்­வ­னவு உள்­ளிட்ட அனைத்து விப­ரங்­க­ளையும் உள்­ள­டக்கி அறிக்கை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறும் இரா­ணுவ தள­ப­திக்கும் லங்கா லொஜஸ்டிக் நிறு­வ­னத்­துக்கும் நீதிவான் உத்­த­ர­விட்டார்.

இதன்­போது மன்றில் ஆஜ­ரா­கி­யி­ருந்த சந்­தேக நப­ரான இரா­ணுவ சார்ஜன்ட் மேஜர் பிரே­மா­னத்த உட­லா­க­மவின் சட்­டத்­த­ரணி ரசிக பால­சூ­ரிய, அடை­யாள அணி­வ­குப்பு ரத்து செய்­யப்­பட்­டதை காரணம் காட்டி பிணைக் கோரினார். லசந்­தவின் கொலை தொடர்பில் சந்­தேக நபர் அடை­யாளம் காட்­டப்­ப­ட­வில்லை எனவும் கொலையின் பின்­ன­ரான சம்­ப­வ­மான அவ­ரது சாரதி டயஸை கடத்­தி­யமை தொடர்­பி­லேயே அடை­யாளம் காட்­டப்­பட்­டுள்­ளதால் தனது சேவை பெறு­ந­ருக்கு பிணை வழங்­கு­மாறும் அவர் கோரிக்கை முன்­வைத்தார்.

பிணைக் கோரிக்­கைக்கு குற்றப் புல­னாய்வுப் பிரிவின் சிறப்பு விசா­ரணை அதி­காரி நிஸாற்த சில்­வாவும் பாதிக்­கப்­பட்ட தரப்பு சட்­டத்­த­ரணி அதுல எஸ். ரண­க­லவும் கடும் எதிர்ப்பு வெளி­யிட்­டனர்.

அவ்­விரு சம்­ப­வங்­களும் வெவ்­வே­றா­ன­தல்ல என விளக்­கப்­ப­டுத்­திய குற்றப் புல­னாய்வுப் பிரிவு, லசந்த படு­கொலை தொடர்­பி­லான விசா­ர­ணை­க­ளுடன் சேர்த்தே அவர் சார­தியின் கடத்தல் விவ­கா­ரமும் விசா­ரணை செய்­யப்­ப­டு­வ­தா­கவும் அது கொலையின் பின்­ன­ரான சாட்­சி­ய­ளிப்பு நட­வ­டிக்கை எனவும் சுட்­டிக்­காட்­டினர். அத்­துடன் விசா­ரணை நிறை­வு­றாத நிலையில் பிணை வழங்கக் கூடாது எனவும் எற்­க­னவே அவர் சார­தியை கடத்தி சென்று அச்­சு­றுத்­தி­யுள்ள நிலையில் அவர் பினையில் செல்வது சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் எனவும் விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிவான் சந்தேக நபரான இராணுவ சார்ஜன்ட் மேஜரை எதிர்வரும் செப்டம்பர் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

அத்துடன் இன்றைய தினம் அவரை கம்பஹா நீதிமன்றில் அடையாள அணிவகுப்புக்கு ஆஜர்படுத்த விடுக்கப்பட்ட கோரிக்கையையும் ஏற்றுக்கொண்ட நீதிவான் இன்று அவரை உபாலி தென்னகோன் மீதான தாக்குதல் குறித்த வழக்கின் அடையாள அணிவகுப்புக்காக அங்கு ஆஜர் செய்யவும் கட்டளையிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11