பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் யாழில் வாள்வெட்டு ; ஒருவர் படுகாயம்

Published By: Digital Desk 4

27 May, 2021 | 07:43 PM
image

நாடளாவிய ரீதியில் பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் தென்மராட்சி கொடிகாமம் பகுதியில் வாள் வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் கொடிகாமம் கரம்பகம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கரம்பகம் பகுதியில் வசிக்கும் இளைஞர் ஒருவர் வீட்டில் இருந்த போது மூன்று மோட்டார்  சைக்கிளில் வந்த சுமார் 10 பேர் கொண்ட கும்பல் இளைஞரைக் கூப்பிட்டு குறித்த இளைஞன் மீது வாள்வெட்டு நடத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளது.   

இதன்போது குறித்த கும்பல் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்தில் விட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளதாகத் தெரியவருகிறது.

வாள்வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான இளைஞர் கை விரல் துண்டாடப்பட்ட நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

வாள்வெட்டை மேற்கொண்டவர்கள் கொடிகாமம் பாலாவி பகுதியைச் சேர்ந்தவர்கள் என பாதிக்கப்பட்டவரின் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01