கொழும்பு கொள்ளுபிட்டி பிரதேசத்தில் தனியார் வைத்தியசாலையொன்றில் இருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளர், பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கொரோனா தொற்றாளராக இனங்காணப்பட்ட பின்னர், கடந்த 25 ஆம் திகதி குறித்த வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சந்தேகநபர் நேற்று (26.05.2021) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த கொரொனா தொற்றாளரை, பாலமுனை கொரோனா சிகிச்சை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், அவரது சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் அனைத்தும் முடிவுற்றதன் பின்னர் தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்பு சட்டவிதிகளின் கீழ் சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM