(எம்.எப்.எம்.பஸீர்)
கொழும்பு துறைமுகத்துக்கு வட மேல் திசையில், 9.5 கடல் மைல் தூரத்தில், எரிந்துகொண்டிருக்கும் சரக்குக் கப்பலில் இருந்து மீட்கப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இரு இந்திய ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை தெரியவந்துள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் போது இது தெரியவந்ததாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் கேசரிக்கு தெரிவித்தார்.
நேற்று காலை குறித்த கப்பலில் தீ பரவலுக்கு இடையே இரு வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் கப்பல் ஊழியர்கள் இருவர் இதன்போது காயமடைந்திருந்தனர்.
இந் நிலையில் காயமடைந்த கப்பல் ஊழியர்களான இந்தியர்கள் இருவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடற்படையினரால் அனுமதிக்கப்பட்டதாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்திருந்தார்.
அந்த இருவரில் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்ப்ட்டுள்ளது. அத்துடன் அக்கப்பலின் பணிக் குழுவில் இருந்த ஏனைய 23 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், அவர்களுக்கும் கொரோனா தொற்று பரிசோதனைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட அனைவரும், கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய, துறைமுக அதிகாரசபையின் மேற்பார்வையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM