கறுப்புப் பூஞ்சைத் தொற்று பாதிப்பை குணப்படுத்துவதற்காக அளிக்கப்படும் மருந்துகளால் நோயாளிகளுக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக காது மூக்கு, தொண்டை மருத்துவ சிகிச்சை நிபுணர் வைத்தியர் கிருஷ்ணகுமார் தெரிவித்ததாவது....
' கறுப்புப் பூஞ்சைத் தொற்று பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு மருந்துகளாலும், சத்திர சிகிச்சைகளாலும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் கருப்புப் பூஞ்சைத் தொற்றால் பாதித்தவர்களுக்கு வழங்கப்படும் மருந்துகளால் சிலருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படுகிறது. சிலருக்கு சிறுநீரக செயலிழப்பும் ஏற்படுகிறது. வேறு சிலருக்கு கூடுதலான சில பாதிப்புகளும் ஏற்படுகின்றன.
அதனால் அவர்களுக்கு இணை பாதிப்புகள் ஏற்படாமல் சிகிச்சை வழங்குவது சவாலாக இருக்கிறது. அதே தருணத்தில் கருப்புப் பூஞ்சைக்கு குறிப்பிட்ட சில மருந்துகளை தவிர மாற்று சிகிச்சை முறைகள் இல்லை. இத்தகைய மருந்துகளை வழங்காவிட்டால், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும்.
எனவே, நோயாளிகள் கொரோனாத் தொற்று பாதிப்பு ஏற்படாமல் தங்களை தற்காத்துக்கொள்ளவேண்டும்.
அத்துடன் கொரோனாத் தொற்றைத் தடுப்பதற்காக அரசு அறிவித்துள்ள அனைத்து மருத்துவ நடைமுறைகளையும் தவறாது கடைப்பிடித்து, முழுமையான விழிப்புணர்வுடன் தங்களைத் தற்காத்துக் கொள்ளவேண்டும்.' என்றார்.
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM